தேசிய தின அணிவகுப்பின்போது போலி வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
31d50643-22f4-4f47-afa6-8f4e10063edc
-

தேசிய அணி­வ­குப்பு நடை­பெற்­ற­போது மரினா பே மிதக்­கும் மேடை ஒரு பொரு­ளால் வெடிப்­புக்கு உள்­ளா­கும் என்று பொய்­யான தக­வ­லைத் தெரி­வித்­த­தன் தொடர்­பில் 18 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அது­பற்றி அந்த ஆட­வர் நேற்று முன்­தி­னம் டுவிட்­ட­ரில் பதி­விட்டார். பார்­வை­யா­ளர்­கள் பகுதி­யில் அமைந்­தி­ருக்­கும் 27ஆம் வரி­சை­யில் உள்ள இருக்­கைக்கு அடி­யில் வெடிக்­கச் செய்­யும் கருவி இருந்­த­தாக அவர் அந்­தப் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இளை­ய­ரின் டுவிட்­டர் பதிவு குறித்து செவ்­வாய்க்­கி­ழமை இரவு 7.10 மணி­ய­ள­வில் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.

இரண்டு மணி­நே­ரத்­துக்­குள் குற்­ற­வி­யல் புல­னாய்­வுப் பிரிவு, அங் மோ கியோ காவல்­து­றைப் பிரிவு ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் சந்­தேக நப­ரைக் கண்­டு­பி­டித்து கைது செய்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தேசிய தின அணி­வ­குப்பு நிகழ்ச்­சி­கள் நடை­பெற்ற இடத்­தில் சந்­தே­கத்­துக்­கு­ரிய பொருள்­கள் ஏதும் தென்­ப­ட­வில்லை என்று கண்­ட­றி­யப்­பட்­டது.

வழக்கு தொடர்­பான தட­யங்களாக, அதி­கா­ரி­கள் இரண்டு கைத்­தொ­லை­பே­சி­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், அந்த இளை­ய­ருக்கு ஏழு ஆண்டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யும் 50,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.