இணையத்தில் 19 பொம்மை துப்பாக்கிகளை வாங்கிய மாண
வருக்கு 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
டான் யான் ரோங், 20, எனப்படும் அவர், தன்வசம் வைத்துக்கொள்ளும் அல்லது மறுவிற்பனை செய்யும் நோக்கத்துடன் 'டாவ்பாவ்' இணைய வர்த்தகத்தளத்தில் பொம்மைத் துப்பாக்கிகளை வாங்கியதாக நீதிமன்றத்தில் கூறினார்.
ஆயுதம், வெடிமருந்துத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கடந்த மாதம் அவர் ஒப்புக்கொண்டார்.
மற்றொரு குற்றச்சாட்டு, தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டு உள்ளதால் டான் தினமும் இரவு 10 மணி
யிலிருந்து காலை 6 மணிவரை தம் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
அத்துடன் 15 மாத காலக் கண்காணிப்பின்போது 60 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபடவேண்டும். டானின் நன்னடத்தையை உறுதிசெய்யும் பொருட்டு அவரது பெற்றோர் $5,000 பிணைப் பத்திரம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹில்வியூ அவென்யூவில் உள்ள லாம் சூன் தொழிற்சாலைக் கட்டடத்தில் சோதனை மேற்கொண்டபோது நான்கு தொகுப்பு விளையாட்டுத் துப்பாக்கிகளைத் தாங்கள் கண்டதாக 2020 செப்டம்பர் 7ஆம் தேதி குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட டானின் வீட்டிலிருந்து 19 பொம்மைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

