தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனக் கலை வடிவங்களில் ராமாயணப் படைப்புகள்

2 mins read
e2adbde3-9be7-44fd-b85b-b75da6407e40
-

பொன்­மணி உத­ய­கு­மார்

சிங்­கப்­பூர் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் ஏற்­பாட்­டில் 'சீனத்­தில் ராமா­ய­ணம்' (Ramayana Retold in Chinese) எனும் நிகழ்ச்சி இன்று நடை­பெ­று­கிறது. நிகழ்ச்­சி­யில் இசைக் கலை­ஞர் டாக்­டர் சுவா சூ பொங் காலை 11 மணி­யி­லி­ருந்து 12.30 மணி வரை இணை­யம்­வழி பேச­வி­ருக்­கி­றார்.

இந்­தி­யப் புரா­ண­மான ராமா­ய­ணம், உல­க­மெங்­கும் பர­வி­யி­ருப்­பதை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் தெரி­விப்­ப­தும் அதன் புக­ழைப் புரி­ய­வைப்­ப­தும் இந்­நி­கழ்ச்­சி­யின் நோக்­க­மா­கும். அது­மட்­டு­மின்றி, அறி­வு­பூர்­வ­மான இவ்­வு­ரை­யா­டல் மூலம் மக்­க­ளி­டையே கலை குறித்­தும் கலா­சா­ரம் குறித்­தும் ஆழ­மான புரி­தலை ஏற்­ப­டுத்த முடி­யும் என்று சிங்­கப்­பூர் தமிழ்ப் பண்­பாட்டு மையம் நம்­பு­கிறது.

சீனக் கலை­யான 'தியோச்சு ஓப்ரா' வடி­வில் டாக்­டர் சுவா 1991ஆம் ஆண்டு முதன்­மு­றை­யாக ஜெர்­ம­னி­யில் இந்­நி­கழ்ச்­சி­யைப் படைத்­தார். அதைத் தொடர்ந்து, நான்கு வெவ்­வேறு சீனக் கலை வடி­வங்­க­ளி­லும் கைப்­பாவை நாட­கங்­க­ளா­க­வும் இசை நாட­கங்­களா­க­வும் ராமா­ய­ணத்தை மாற்றி படைத்­துள்­ளார்.

இப்­ப­டைப்­பு­கள் சிங்­கப்­பூர், சீனா, வியட்­னாம், கம்­போ­டியா உட்­பட 10 நாடு­களில் அரங்­கே­றி­யுள்­ளன. பன்­னாட்டு மேடை நாடக விழாக்­க­ளி­லும் இந்­நி­கழ்ச்சி­கள் படைக்­கப்­பட்­டுள்­ளன.

இரு கலா­சா­ரங்­களை இணைக்­கும் இந்­தக் கலைப் படைப்­பு­க­ளின் மூலம் ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளை­யும் எதிர்­நோக்­கிய சவால்­க­ளை­யும் பற்றி பாரம்­ப­ரிய இசை இய­லா­ளர் டாக்­டர் சுவா, உரை­யா­ட­லின்­போது பகிர்­வார்.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே கலை மீது ஆர்­வம் கொண்ட டாக்­டர் சுவா, கல்­வி­யா­ள­ராக, நாடக எழுத்­தா­ள­ராக, இயக்­கு­ந­ராக, நடன அமைப்­பா­ள­ராக கலை உல­கிற்­குப் பங்­களித்­துள்­ளார். 30 ஆண்­டு­க­ளாக பல்­லின கலை­க­ளை­யும் கலா­சா­ரங்­க­ளை­யும் இணைக்­கும் நிகழ்ச்சி­க­ளை­யும் ஆத­ரித்து ஏற்­பாடு செய்­துள்­ளார்.