சிறுவர்கள் மற்றும் இளையர்களுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் கல்வி இன்றியமையாத ஒன்று. இதில் தாங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறிய யுஓபி வங்கி, நேற்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதி'க்கு $500,000 நன்கொடை வழங்கியது.
வங்கி முன்னதாக ஜூன் மாதத்தில் இதேபோல் $500,000ஐ நன்கொடையாக வழங்கியிருந்தது.
இவ்வாறு பள்ளிக் கைச்செலவு நிதிக்கு ஆதரவு தருவதன் மூலம் பள்ளிக்காக தேவைப்படும் வளங்களைச் சிறார்களும் இளையர்களும் பெறுவர் என்றும் குறிப்பாக இச்சவால்மிக்க காலகட்டத்தில் நிதி பேருதவியாக இருக்கும் என்றும் தாம் நம்புவதாக வங்கியின் வர்த்தகப் பரிவர்த்தனைப் பிரிவின் தலைவர் திரு எரிக் லியன் கூறினார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இவ்வாண்டின் முதல் பாதியில் தாராளமாக வழங்கி இருந்த நன்கொடைகள் மூலமாக இந்த நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதுவரை 200,000க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு நிதித் திட்டத்தின் மூலம் $90 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.