$32 மி. பொருள்கள் மோசடி: தம்பதியர் மீது குற்றச்சாட்டு

$32 மி. பொருள்கள் மோசடி: தம்பதியர் மீது குற்றச்சாட்டு

2 mins read
12b5b0e6-1e59-430e-970f-d5e4873a4537
ஓர் இருக்கையில் அமர்ந்துள்ள தம்பதியர் அருகே காவல்துறை அதிகாரிகள் நின்றுகொண்டு இருப்பதை ஹோட்டலின் பிரத்தியேகப் படச் சாதனங்கள் எடுத்த இந்தப் படம் காட்டு கிறது.படம்: ஷின்மின் -

சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டுச் சென்றது தவறுதான் என்று கணவர் ஒப்புக்கொண்டார்

ஆடம்­பர பொருள்­கள் தொடர்­பான மோச­டி­களில் ஈடு­பட்டு இருப்­ப­தாகக் கூறப்­படும் ஒரு தம்­பதி நேற்று பிற்­ப­க­லில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் படுத்­தப்­பட்­டார்­கள்.

இந்த விவ­கா­ரத்­தில் மொத்­தம் $32 மில்­லி­யன் மதிப்­புள்ள பொருள்கள் பட்­டு­வாடா செய்­யப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

பி ஜியா­பெங், 26, என்ற ஆடவர் மீதும் தாய்­லாந்து நாட்­ட­வ­ரான பன் சுக் சிரி­விப்பா என்ற 27 வய­துள்ள அவ­ரு­டைய மனைவி மீதும் தலா மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவற்­றில் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் ஏமாற்­றி­யது தொடர்­பா­னவை.

மற்­றொரு குற்­றச்­சாட்டு, சிங்­கப்­பூ­ரை­விட்டு அவர்­கள் சட்­ட­விரோ­த­மாக வெளி­யே­றி­ய­தா­கக் கூறு­கிறது. அந்­தத் தம்­ப­தி­யர் இரு­வ­ரும் இந்த ஆண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் ஜூன் மாதத்­துக்­கும் இடை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரை­யும் ஏமாற்றி இருக்­கி­றார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

அந்த இரு­வ­ரும் காணொளி மூலம் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார்­கள். அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் அவர்­களி­டம் படித்து காட்­டப்­பட்­டன.

அந்த இரு­வ­ரை­யும் ஒரு வார காலம் விசா­ர­ணை­க்காவலில் வைக்­கும்­படி மாவட்ட நீதி­பதி பிரண்டா டான் உத்­த­ர­விட்­டார்.

நேற்­றைய விசா­ர­ணை­யில் அந்த இரு­வ­ரின் சார்­பில் யாரும் வாதா­ட­வில்லை. அவர்­கள் இரு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி மீண்டும் நீதி­மன்­றத்­தில் முன்­னிலை­யா­வார்­கள்.

ஆடம்­ப­ர­மான கைக்­க­டி­கா­ரங்­களை­யும் விலை உயர்ந்த கைப்­பை­க­ளை­யும் விற்­ப­தா­கக் கூறி பல­ரை­யும் நம்ப வைத்து அந்த இரு­வ­ரும் அவர்களை ஏமாற்றி இருக்­கி­றார்­கள் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த இரு­வ­ரும், 'டிரேட்­நே­ஷன்', 'டிரேட் லக்­சூரி' என்ற பெயருள்ள நிறு­வ­னங்­கள் வழி­யாக இந்­த மோசடிகளைச் செய்து இருக்­கிறார்கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அந்த இரு­வ­ரி­டம் ஏமாந்­த­வர்­கள் $20 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகையை கொடுத்து இருக்­கிறார்­கள். ஆனால் எந்­தப் பொரு­ளை­யும் அவர்கள் பெற­வில்லை என்று விசா­ர­ணை­யின்­போது அரசுத் தரப்பு வழக்­கு­ரை­ஞர் கூறி­னார்.

பி ஜியா­பெங் ஜூன் 27ஆம் தேதி கைதா­னார். அவ­ருக்கு $15,000 பிணை அனு­ம­திக்­கப்­பட்­டது. அந்த இரு­வ­ரின் கட­வுச்­சீட்டு­களை அதி­கா­ரி­கள் முடக்­கி­விட்­ட­னர். ஆனால், ஜூலை 4ஆம் தேதி அந்த இரு­வ­ரும் சட்­ட­வி­ரோ­த­மாக தரை எல்லை வழி சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யே­றி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த இரு­வ­ரும் தப்­பிக்க உத­வி­ய­தா­கக் கூறப்­படும் இரண்டு மலே­சி­யர்­கள் மீது ஏற்­கெ­னவே குற்­றம் சுமத்­தப்­பட்டு இருக்­கிறது.

தப்பிவிட்டதை அடுத்து தம்­பதியர் இரு­வரை­யும் கைது செய்ய ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

மலே­சிய காவல்­துறை அதி­காரிகள் வியா­ழக்­கி­ழமை அந்த இரு­வரை­யும் கைது­செய்து அதே­நா­ளன்று சிங்­கப்­பூர் காவல்­துறை யிடம் ஒப்­ப­டைத்­தனர்.

இந்த விவ­கா­ரத்­தில் 180க்கும் மேற்­பட்ட புகார்­கள் காவல்­து­றை­யி­டம் தாக்­க­லாகி இருக்­கின்­றன. புலன்­வி­சா­ரணை தொடக்­கக் கட்­டத்­தில் இருக்­கிறது என்று அர­சுத் தரப்பு தெரி­வித்து உள்­ளது.

இத­னி­டையே, நேற்று நீதி­மன்ற விசா­ர­ணை­யின்போது பேசிய பி ஜியா­பெங், தாங்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யே­றி­யது தவறு என்­றார்.

புலன்­வி­சா­ர­ணைக்கு முழு ஒத்­து­ழைப்பு தரப்­போ­வ­தா­க­வும் அவர் கூறி­னார். அதே­போ­லவே அவரின் மனை­வி­யும் தெரி­வித்­தார்.