பெண் கைதிகளின் கைவண்ணத்தில் அலங்கார விளக்குகள்; விழாவில் ஒளிவீசும்

பெண் கைதிகளின் கைவண்ணத்தில் அலங்கார விளக்குகள்; விழாவில் ஒளிவீசும்

2 mins read
e4d70e5c-40e8-4ee8-9c62-47c52de79e68
கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கலைகள்' என்ற செயல்திட்டத்தின்கீழ் இந்த அலங்கார விளக்குகள் உருவாக்கப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெண் சிறைக் கைதி­கள் கை வண்ணத்­தில் உரு­வா­கும் ஐந்து புலி அலங்­கார விளக்­கு­கள் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்­டம்­பர் 11ஆம் தேதி வரை கரை­யோரப் பூந்­தோட்­டங்­களில் நடக்­கும் வரு­டாந்­திர இலை­யு­திர்­கால திரு­வி­ழாவை அலங்­க­ரிக்க இருக்­கின்றன.

'மறு­ஐக்­கி­யம்' என்­பது அந்த விழா­வின் இந்த ஆண்­டின் கருப்­பொ­ருள். விழா­வுக்கு எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் நிறு­வ­னத்­தின் சீன ஊட­கக் குழு­ம­மும் ஒரு பங்­கா­ளி­யாக இருக்­கிறது.

பெண் கைதி­கள் உரு­வாக்­கும் அலங்­கார விளக்கு ஒவ்­வொன்­றும் 1.4 மீட்­டர் விட்­டம், 1.5 மீட்­டர் உயரம் உள்­ளவை. அவை சீனர்­க­ளின் மங்­க­ல­க­ர­மான ஐந்து அம்­சங்­களைக் குறிக்­கும் வகை­யில் ஐந்து நிறங்­களில் உரு­வா­கின்­றன.

மகிழ்ச்சி (மஞ்­சள்), உடல்­ந­லம் (பசுமை), காதல் (சிவப்பு), நீண்ட ஆயுள் (நீலம்), அமைதி (வெள்ளை) ஆகி­யவை அந்த ஐந்து மங்­க­ல­க­ர­மான அம்­சங்­க­ளா­கும்.

அந்த அலங்­கார விளக்­கு­களை 19 பெண் கைதி­கள் வடி­வ­மைத்து அவற்­றுக்கு வண்­ணம் தீட்டி உரு­வாக்கி இருக்­கி­றார்­கள்.

மஞ்­சள் நாடா திட்­டத்­தின் 'சிறைக்­கம்­பி­க­ளுக்­குப் பின்­னால் கலை­கள்' என்ற செயல்­திட்­டத்­தை­யொட்டி அந்த விளக்­கு­கள் உரு­வாகி இருக்­கின்­றன.

சாங்கி சிறைச்­சாலை வளா­கத்­தில் அமைந்­துள்ள ஏ4 நிலை­யம் முற்றிலும் பெண்­க­ளுக்கு உரி­ய­தாகும். அங்கு அந்­தக் கைதி­கள் அந்த விளக்­கு­க­ளுக்கு இறுதி வடிவம் கொடுத்­த­னர்.

புலி விளக்­கு­களில் ஓவி­யம் வரைந்து வண்­ணம் தீட்­டு­வது ஏன் என்­பதை அவர்­கள் விளக்­கி­னர்.

"இத்­த­கைய ஓவி­யத்­தில் எங்­களுக்கு அனு­ப­வம் கிடை­யாது. ஆகை­யால், இது ஒரு சவா­லாக இருந்­தது. ஆனால் ஊக்­கம், உறுதி கார­ண­மாக செம்­மை­யாக இதை நாங்­கள் செய்து முடித்து இருக்­கிறோம்," என்று உடல்­நலத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் பச்­சை­நிற விளக்­குக்கு வண்­ணம் தீட்ட உதவிய ஃபாரா, 47, (உண்மை பெயர் அல்ல) என்ற ஒரு பெண் கைதி கூறி­னார்.

2020ல் தொடங்­கி­ய சிறைக்­ கைதி­ க­ளுக்­குப் பின்­னால் கலை­கள் செயல்­திட்­டம் கைதி­கள் புதுத் தேர்ச்சி­களைக் கற்­றுக்­கொள்­ள­வும் புதி­ய­வர்­க­ளாக மாறி வாழ ஒரு வழியையும் திட்­டம் ஏற்­ப­டுத்தித் தரு­கிறது. அதில் கலந்து­கொள்ளும் கைதி­கள் திருந்­து­கி­றார்­கள்.