பிறர் நலன் காப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடும் நங்கையர்

பிறர் நலன் காப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடும் நங்கையர்

4 mins read
0e4c9b7d-1c31-4896-a2d1-1dee56e342c7
ஏழு ஆண்டுகளாக மனநல ஆலோசகராக சேவையாற்றி வரும் நஸ்‌ரின் ஷா பீவி, 33. படம்: நஸ்‌ரின் ஷா பீவி -
multi-img1 of 2

மாதங்கி இளங்­கோ­வன்

உடல்­ந­லம், மன­ந­லம் இவ்­வி­ரண்டுக்­கும் அண்­மைக் கால­மாக அதிக முக்­கி­யத்­து­வம் தரப்­பட்டு வரு­கிறது. மக்­கள் தங்­க­ள் சுகா­தாரத்­திற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்­டும் என்ற விழிப்­பு­ணர்­வு பர­வி­ வ­ரு­கிறது.

அவ்­வ­கை­யில் உதவி தேவைப்­படு­வோ­ருக்கு ஆலோ­ச­னை­யும் நிவா­ர­ண­மும் அளிப்­ப­தில் கடப்­பாடு கொண்­டுள்­ள­னர் இரு­வர்.

மன­தை­யும் உட­லை­யும் பேணு­வது முக்­கி­யம்

மன­நல ஆலோ­ச­னை­களை இணை­யத்­தின் வாயி­லாக நஸ்­‌ரின் ஷா பீவி, 33, வழங்கி வரு­கி­றார். ஏழு ஆண்­டு­க­ளாக மன­நல ஆலோ­ச­க­ரா­கச் சேவை­யாற்­றி­வ­ரும் இவர், மாண­வர்­கள், தம்­ப­தி­யர், குடும்­பங்­கள் என வெவ்­வேறு பிரி­வி­ன­ருக்கு உத­வி­யுள்­ளார். ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் ஊட­கத் துறை­யில் பட்­ட­யப்­ப­டிப்பை முடித்த இவர், பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அதே படிப்­பைத் தொடர்ந்து மேற்­கொள்­வ­தற்கான வாய்ப்­பைப் பெற­வில்லை.

ஆனால், துவண்டு போகா­மல் வேறெ­தில் தனக்­குத் திற­மை­யுண்டு என்­ப­தைப் பற்றி சிந்­திக்­கத் தொடங்­கி­னார், நஸ்­‌ரின். தன்­னு­டைய குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் முன்­ன­தாகக் கூறிய வார்த்­தை­கள் அப்­போது அவர் நினை­வுக்கு வந்­தன.

"என் நண்­பர்­கள் அவர்­க­ளு­டைய கவ­லை­க­ளைப் பற்றி என்­னோடு பகிர்ந்­து­கொள்­ளும்­போது காது கொடுத்துக் கேட்­பேன் என்­ப­தால் நான் ஒரு நல்ல நண்­பர் என அவர்­கள் அடிக்­கடி கூறு­வார்­கள். எந்­நே­ர­மும் என் உதவி நாடி வர­லாம் என அவர்­களும் எனது குடும்­பத்­தி­ன­ரும் நம்­பு­வ­தால் அன்­பை யும் அக்­க­றை­யையும் வெளிப்­ப­டுத்­து­வது எனக்கு இயல்­பாக இருக்கும் பண்பு என்­ப­தைப் புரிந்­து­கொண்­டேன்," என்­றார் நஸ்­ரின். இந்­தப் பண்பை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒரு தொழிலை ஏன் தேர்ந்­தெ­டுக்­கக்­கூ­டாது என்று நினைத்த நஸ்­ரின், ஆலோ­சனை சேவை­ய­ளிக்­கும் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­தார்.

பின்­னர், அதே துறை­யில் முது­கலைப் பட்­டத்­தை­யும் பெற்­றார். ஆலோ­சனை சேவைத் துறை தொடர்­பான படிப்பை மேற்­கொண்ட பிறகு அவர் தனது உணர்­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் அது உத­வி­ய­தாகப் பகிர்ந்­து­கொண்­டார்.

அவ்­வாறு தொடங்­கிய அவ­ரது ஆலோ­ச­கர் பய­ணம், குடும்­பச் சேவை நிலை­யம், 'பெர்­சத்­து­வான் பெமுடி இஸ்­லாம் சிங்­கப்­பூர்', சிங்­கப்­பூர் சிறு­வர் சங்­கம், 'ஜாமியா சிங்­கப்­பூர்' ஆகிய அமைப்­பு­களில் தொடர்ந்­தன. தற்­போது, அவர் 'ஹார்ட்ஸ் குவெஸ்ட்' எனும் அமைப்­பில் ஆலோ­சனை சேவை­ வழங்­கு­கி­றார்.

மன­ந­லத்­திற்கு அண்­மைய கால­மாக அர­சாங்­கம் கொடுக்­கும் முக்­கி­யத்­து­வம் குறித்து நஸ்­‌ரின், "அதி­க­ரித்­து­வ­ரும் குடும்ப வன்­முறைச் சம்­ப­வங்­கள், அவற்­றால் சிறு­வர்­க­ளின் மன­ந­லம் பாதிக்­கப்­படு­தல் போன்­ற­வற்றை அர­சாங்­கம் உணர்ந்­துள்­ள­தால் மன­நல ஆலோ­ச­னைச் சேவை­க­ளுக்கு அதிக ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ளது. சிறு வய­தி­லி­ருந்தே பாதிக்­கப்­படும் பிரி­வி­ன­ருக்கு முறை­யான ஆலோ­ச­னை­ய­ளித்து அவர்­களை நல்­வ­ழிப்­படுத்த வேண்­டும் என்பது என்­போன்ற மன­நல ஆலோ­ச­கர்­க­ளின் குறிக்­கோ­ளா­கும்," என்­றார்.

ஆலோ­சனை கூறும்­போ­தெல்­லாம் ஒரு­வர் தன்­னு­டைய மன­நலத்­திற்­கும் உடல்­ந­லத்­திற்­கும் முன்­னுரிமை கொடுக்க வேண்­டு­மென தான் வலி­யு­றுத்­து­வ­தாக நஸ்­‌ரின் கூறி­னார். மன­துக்கு அமை­தி

­ய­ளிக்­கும் ஒரு நட­வ­டிக்­கைக்கு வாரந்­தோ­றும் நேரம் ஒதுக்­க­லாம் என்­கிறார். ஒவ்­வொரு வார­மும் மக்­கள் தங்­களுக்­கென நேரத்தை ஒதுக்கி, உள்­ளத்­திற்கு இன்­ப­ம­ளிக்­கும் நட­வடிக்­கை­களில் ஈடு­பட்­டாலே படிப்­பி­லும் வேலை­யி­லும் அதிக கவ­னம் செலுத்தி மேலும் முன்­னே­று­வ­தற்கு வாய்ப்­புண்டு என்கி­றார் இவர்.

நோயா­ளி­க­ளின் வாழ்க்­கை­யில் நல்­ல­தொரு தாக்­கம் வேண்­டும்

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருந்து அறி­வி­யல் துறை­சார்ந்த படிப்பை மேற்­கொள்­ளும் நிக்­கொல் சங்­கர், 21, சுகா­தார அமைச்சு குழு­மத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளத்தை பெற்ற 120 நபர்­களில் ஒரு­வ­ரா­வார்.

சுகா­தா­ரத் துறை­யில் திறன் வாய்ந்­த­வர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை அமைத்­துத் தரும் நோக்­கத்­தோடு இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­பட்டு வரு­கிறது. மருந்து அறி­வியல் துறை­யில் அதிக ஈடு­பாடு காட்டி­வரும் நிக்­கொல், எதிர்­கா­லத்­தில் தனது பணி­யின் மூலம் நோயாளி­களது வாழ்க்­கை­யில் நல்­ல­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற லட்­சி­யத்­தைக் கொண்­டுள்­ளார். மருத்­து­வத் துறை எனும்­போது மருந்து அறி­வி­யல் துறை­யில் உள்­ள­வர்­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி பெரும்­பா­லா­னோர் அறி­வ­தில்லை என்று கூறிய நிக்­கொல், இதை மாற்ற விரும்­பு­கி­றார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மூன்­றாம் ஆண்டு படிப்­பைத் துவங்­க­வுள்ள இவர், தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யி­லும் காலாங், ஹவ்­காங் மருந்­த­கங்­க­ளி­லும் மருந்­தக உதவி­யா­ள­ராக வேலை அனு­ப­வம் பெற்­றவர். மன உளைச்­ச­லுக்­கும் மனச்­சோர்­வுக்­கும் ஆளா­வது இந்தப் பணி­யில் ஏற்­ப­டக்­கூ­டிய சவால் என்­றார் அவர்.

"நம் வேலை­யால் அதி­கம் சோர்­வ­டை­யும்­போது, ஏன் இத்­துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­தோம் என்­பதை நினைத்­துப் ­பார்க்க வேண்­டும். அதோடு, கடி­ன­மாக உழைத்­தா­லும் நம் உடல்­ந­லத்­தை­யும் தேவை­க­ளை­யும் பார்த்­துக்­கொள்­வது மிக அவ­சி­யம்," என்­றார் நிக்­கொல்.

ஒரே மொழி பேசாத கார­ணத்­தால் நோயா­ளிக்­கும் மருத்­து­வச் சேவை­யில் ஈடு­ப­டு­ப­வ­ருக்­கும் இடை­வெளி ஏற்­ப­ட­லாம். இத­னாலேயே தன்­னால் முடிந்­த­வரை பல மொழி­க­ளைக் கற்­றுக்­கொள்­ளும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கிறார் நிக்­கொல். இவர் தன் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சைகை மொழிச் சங்­கத்­தில் இருப்­ப­து­டன் மற்­ற­வர்­களுக்­கும் சைகை மொழி­யைக் கற்­பித்து வரு­கி­றார்.

தன் பெற்­றோ­ரும் ஆசி­ரி­யர்­களும் தனக்­குத் தந்த ஆத­ர­வு­டன் தனது உழைப்­புக்­கும் சேர்த்­துக் கிடைத்த வெற்­றி­தான் இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் என்­கி­றார் இளையர் நிக்கொல் சங்கர்.