அரசாங்க வழங்குதொகைகளுக்கான மின்னிலக்கச் சேவை 'கவ்வாலட்'. சென்ற ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தச் செயலி காகிதப் பயன்பாட்டைக் குறைக்க உதவுவதுடன் தொகைகளை எளிதாக வழங்கவும் வகைசெய்கிறது.
இதுவரை இதன் மூலம் 900,000 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றின் மொத்த மதிப்பு 41 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்றும் ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
'கவ்வாலட்' செயலி மூலம் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் அவரவர் தகுதிபெறும் திட்டத்துக்கேற்ப அரசாங்கம் வழங்கும் தொகைகளைப் பெற்றுக்கொள்ள இயலும். இந்தத் தொகையை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது 'பே நவ் யூஇஎன்', 'நெட்ஸ் கியூஆர்' ஆகியவற்றின்வழி கட்டணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளும் வர்த்தகர்களிடம் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.

