பொன்மணி உதயகுமார்
தேசிய நூலக வாரியம் மற்றும் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின் (WWF) முயற்சியில் சுவா சூ காங் பொது நூலகத்தில் மக்களை புலி ஒன்று வரவேற்க வந்துள்ளது.
'டிரைபல் கோல்ட்' என அழைக்கப்படும் இப்புலிச் சிற்பத்தை தேசிய நூலக வாரியமும் உல களாவிய இயற்கைக்கான நிதியமும் இணைந்து திறந்துவைத்தன.
உலகளாவிய இயற்கைக்கான நிதியம், நூலகத்திற்கு நன்கொடை யாக அளித்துள்ள 'டிரைபல் கோல்ட்' சிற்பம் தென்கிழக்காசி யாவில் ஏறக்குறைய 1,000 புலிகள் மட்டும் எஞ்சி இருப்பதையும் வருங் கால சந்ததியினர் புலிகளை கண்ணால் காண்பது கேள்விக் குறியாக இருக்கும் நிலையையும் மக்களுக்கு புரிய வைக்கும் என நிதியத்தின் திரு ரகுநாதன் நம்பு கிறார். இயற்கையுடன் மனிதர்கள் தொடர்பை இழந்துவிட்ட இன்றைய சூழலில் மீண்டும் தொடர்பை ஏற் படுத்திக் கொள்வதை கருப்பொருளாகக் கொண்ட இந்நூலகத்தின் மெய் நிகர் கற்றல் பாதையில் 'டிரைபல் கோல்ட்' நிரந்தரமாக இடம் பெறும்.
மெய்நிகர் கற்றலின் புதிய அங்கமாக, தாவரங்களையும் வனவிலங்கு களையும் முப்பரிமாணத்தில் காண்பிக்கக்கூடிய மெய்நிகர் புத்தகங்களையும் நூலக வாரியம் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு போன்றவற்றின் அவசியத்தையும், உயிரியல் அழிவு, சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்றவை குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துவது இம்மாதிரியான நிகழ்வுகளின் நோக்கம் என்று தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழி பிரிவின் தலைவரான அழகியபாண்டியன், 58, பகிர்ந்துகொண்டார்.
நூலகத்தில் இயற்கைவள பாதுகாப்பைக் கருப்பொருளாக கொண்டு ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் கூறினார். முக்கியமாக, சிறுவர்களுக் கிடையே இயற்கை பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் இருப்பதையும் அவர் சுட்டினார்.
நீடித்த நிலைத்தன்மையை அறிவுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சுவா சூ காங் பொது நூலகம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மறுசீரமைப்புப் பணி களுக்குப் பிறகு திறக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, சென்ற மாதம் சிறந்த பசுமை நூலகமாக அனைத்துலக நூலகச் சங்கங்கள், கல்வி நிலையங்களின் சம்மேளனம் அதனை தேர்ந்தெடுத்தது.
இயற்கைவள பாதுகாப்பின் அவசியத்தையும் சுற்றுச்சூழல் பிரச் சினைகளின் தீய விளைவுகள் பற்றியும் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த தேசிய நூலக வாரியம், குறிப்பாக சுவா சூ காங் பொது நூலகம் பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட உள்ளது.
இதன் விவரங்களை பொது மக்கள் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளத்தில் கண்டறியலாம்.

