'பூசலை விரும்பாவிட்டாலும் அமெரிக்க-சீன முடிவுகளால் ஆபத்து உருவாகலாம்'

'பூசலை விரும்பாவிட்டாலும் அமெரிக்க-சீன முடிவுகளால் ஆபத்து உருவாகலாம்'

2 mins read
8452ed88-cecf-4b44-8a8a-2c62123d4bd6
-

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் தங்­க­ளுக்கு இடை­யில் பூசலை விரும்­ப­வில்லை என்­ற­போ­தி­லும் அவ்­வி­ரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இறுக்­க­மான உற­வு­களாலும் அவற்­றின் அண்­மைய முடி­வு­களா லும் உல­குக்கு அதிக ஆபத்து நிகழக்கூடும் என்று துணைப்

பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து உள்­ளார்.

தைவான் தொடர்­பான பிரச்­சினை உள்­ளிட்­ட­வற்­றால் இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யில் அதி­க­ரித்­துள்ள பதற்­றங்­கள் தைவான் நீரி­ணை­யிலோ தென்­சீ­னக் கட­லிலோ எளி­தில் ஒரு விபத்து போன்ற தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த நேர்­கா­ண­லில் திரு வோங் குறிப்­பிட்­டார்.

"இரு நாடு­களும் அடுத்­த­டுத்து பல முடி­வு­கள் எடுத்­து­வ­ரு­வதை நாம் கவ­னிக்­கத் தொடங்கி இருக்­கி­றோம். இத்­த­கைய முடி­வு­கள் இந்த உல­கம் மிக மிக ஆபத்­தா­ன­தாக மாற வழி­வ­குக்­கும். அதற்­கான அறி­கு­றி­களை தைவான் நீரி­ணை­யிலோ தென்­சீ­னக் கட­லிலோ நாம் கண்­டி­ருக்­கக்­கூ­டும்," என்­றார் அவர்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் அமெ­ரிக்க மக்­க­ளவை நாய­கர் நேன்சி பெலோசி மேற்­கொண்ட தைவான் பய­ணம் உள்­ளிட்ட அம்­சங்­கள் தொடர்­பாக எழுந்­துள்ள அமெ­ரிக்க-சீன பதற்­றங்­கள் பற்றி புளூம்­பெர்க்­கின் தலைமை செய்தி ஆசி­ரி­யர் ஜான் மிக்கல்த்வெய்ட் திரு வோங்­கி­டம் கேள்வி எழுப்­பி­னார்.

இதற்கு முன்­ன­ரும் இதைப்­போன்ற சூழல் ஏற்­பட்­டதை திரு வோங் நினை­வூட்­டி­னார்.

"2001ஆம் ஆண்டு அமெ­ரிக்க-சீன உற­வு­கள் நல்ல நிலை­யில் இருந்­த­போது அமெ­ரிக்க உளவு விமா­னம் ஒன்று சீன விமா­னம் ஒன்­று­டன் மோதிய பின்­னர் சீனா­வின் ஹைனான் தீவில் அவ­ச­ர­மா­கத் தரை இறங்­கி­யது.

"இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக அமெ­ரிக்­கா­வின் 24 விமா­னப் பணி­யா­ளர்­களை சீனா பிடித்து வைத்­தி­ருந்­தது. அமெ­ரிக்கா வருத்­தம் தெரி­வித்த பின்­னர் அவர்­களை சீனா விடு­வித்­தது.

"இது­போன்ற ஒரு சம்­ப­வம் இப்­போது நடக்­கு­மா­னால் விளை­வு­கள் தீர்க்க முடி­யாத அள­வுக்கு மோச­மா­ன­தாக மாறக்­கூ­டும்," என்று துணைப் பிர­த­மர் வோங் விளக்­கி­னார்.

அத்­து­டன், இரு நாடு­க­ளின் தலை­மைத்­து­வ­மும் ஒன்றை ஒன்று சந்­தித்­துக்­கொள்ள முடி­யும் என்­றும் குறிப்­பாக ஆக உயர்ந்த மட்­டத்­தில் அது நிக­ழ­லாம் என்­றும் சிங்­கப்­பூர் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.