மோசடிக் கும்பல்களை முறியடித்த சிங்கப்பூர்-மலேசிய காவல்துறை

மோசடிக் கும்பல்களை முறியடித்த சிங்கப்பூர்-மலேசிய காவல்துறை

1 mins read
3a458e84-0819-4999-abef-f352e895ed45
-

சிங்­கப்­பூர்-மலே­சிய காவல்­துறை அதி­கா­ரி­கள் இணைந்து எல்லை தாண்­டிய இரண்டு மோச­டிக் கும்­பல்­களை முறி­ய­டித்­துள்­ள­னர். மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூர், ஜோகூர், சிங்­கப்­பூர் ஆகிய இடங்­களில் ஒரே நேரத்­தில் அதி­ர­டிச் சோத­னை­கள் நடத்­தப்­பட்­டன. இதில் 13 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இரு­நாட்­டுக் காவல்­து­றை­யி­டம் மாட்­டிக்­கொண்ட கும்­பல்­கள் கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கும் குற்­றத்­தில் ஈடு­பட்டு வந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. $1.3 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான இழப்­புக்கு இந்த இரு கும்­பல்­களும் கார­ணம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

இந்­தக் கும்­பல்­கள் விரித்த மோசடி வலை­யில் சிங்­கப்­பூ­ரில் மட்­டும் 60க்கும் மேற்­பட்­டோர் பாதிப்­ப­டைந்­த­னர். மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளி­லும் பாதிப்பு ஏற்­பட்­டது.

முத­லீடு, வேலை, போலி சூதாட்­டத் தளங்­கள், பாலி­யல் சேவை­கள், பாலி­யல் தொடர்­பான மிரட்­டல்­கள், அர­சாங்க அதி­கா­ரி­க­ளைப் போல பாசாங்கு செய்­தல், கடன் முத­லிய மோச­டி­களில் சிக்கி பணம் இழந்­த­தாக சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­டோர் புகார் செய்­தி­ருந்­த­னர்.

கடந்த ஜூலை மாதத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக விவ­கா­ரங்­கள் துறை­யும் மலே­சி­யா­வின் வர்த்­த­கக் குற்ற புல­னாய்­வுத் துறை­யும் இணைந்து செயல்­பட்டு மோச­டிக் குற்­றங்­கள் தொடர்­பான முக்­கிய தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­தாக சிங்­கப்­பூர் காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

இம்மாதம் 10ஆம் தேதியன்று 19 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்களும் ஏழு ஆடவர்களும் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மலேசியர்கள்.

அதே நேரத்தில் 18 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு ஆடவர்களும் இரு பெண்களும் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டனர்.