சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான மருத்துவ வாகனமும் இரண்டு கார்களும் நேற்று முன்தினம் மாலை விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்து கேலாங் சாலைக்கும் தஞ்சோங் காத்தோங் சாலைக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் மாலை 6.45 மணி அளவில் நிகழ்ந்தது. விபத்து காரணமாக அப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய காரில் பயணம் செய்துகொண்டிருந்த 11 மாதக் குழந்தைக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அக்குழந்தை சுய
நினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை கூறியது.
விபத்து நிகழ்வதற்கு முன்பு நோயாளி ஒருவரை மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட மருத்துவ வாகனம் சென்றுகொண்டிருந்ததாகவும்
எச்சரிக்கை விளக்குகள் இயக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.