தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கான மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்றுவிட்டதைத் தொடர்ந்து அதன் 11 புதிய நிலையங்களை ஆண்டிறுதிக்குள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
எல்லாவிதமான கட்டுமான, கட்டமைப்புப் பணிகளும் சோதனை நடவடிக்கைகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து இந்த 11 நிலையங்
களையும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் வழங்கிவிட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று கூறியது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கான ரயில் போக்குவரத்தை ஏற்று நடத்தும் எஸ்எம்ஆர்டி, புதிய நிலையங்களைத் திறப்பதற்கு முன்னர் அடுத்த சில மாதங்களில் அவற்றில் நடைமுறைச் சோதனைகளை நடத்தும்.
ஸ்டீவன்ஸ் நிலையம் தொடங்கி, ஆர்ச்சர்ட், ஊட்ரம் பார்க், கரையோரப் பூந்தோட்டங்கள் செல்
வதற்கான எம்ஆர்டி பாதையில் அமைந்திருக்கும் 11 புதிய நிலையங்களும் இவ்வாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கடந்த மார்ச் மாதம் அறிவித்து இருந்தார்.
அதுகுறித்து நேற்று அவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மூன்றாம் கட்டப் பணிகளில் இடம்பெற்ற சமிக்ஞை முறை சோதனைகள் வாரயிறுதியில் நடத்தி முடிக்கப்பட்டதாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆண்டிறுதிக்குள் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு ஏதுவாக எல்லா அம்சங்களும் தயாராக உள்ளனவா என்பதை எஸ்எம்ஆர்டி நிறுவனம் சோதிக்கும் என்றும் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 1ஆம் கட்டம் முதல் 3ஆம் கட்டம் வரையிலான போக்கு வரத்துக்குரிய ஒருங்கிணைந்த கட்டமைப்புகளிலும் அதில் இடம்பெற்றுள்ள ரயில்களிலும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இவ்வாண்டின் தொடக்கம் முதல் பலகட்ட சோதனைகளை நடத்தின.
சிங்கப்பூரின் ஆறாவது ரயில் பாதையான தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தில் ஓடும் ரயில்களில் அண்மைய மாதங்களில் கோளாறுகள் ஏற்பட்டன.
ஏப்ரல் 27ஆம் தேதி காலை நேரம் உட்லண்ட்ஸ் நிலையத்துக்கும் உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்துக்கும் இைடப்பட்ட பாதையில் ரயில் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக 50 பயணிகள் ஒன்றரை மணி நேரம் அவதியுற நேர்ந்தது.
தொடர்ந்து, மே 19ஆம் தேதி சமிக்ஞை கோளாறு காரணமாக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரு மார்க்கத்திலும் ரயில்கள் ஆக மெதுவாகச் சென்றன. அதன் காரணமாக பயணிகள் கூடுதலாக 10 நிமிடம் காத்திருக்க வேண்டி இருந்தது.
மூன்றாவதாக, ஜூலை 6ஆம் தேதியும் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டது. அதனால் இந்த ரயில் பாதை முழுவதும் மூன்றரை மணி நேரத்திற்கு போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டது. ஆறு நிலை யங்களில் குறைந்த பட்சம் 40 நிமிடங்கள் ரயில்களுக்குள் பயணிகள் சிக்கி அவதிப்பட்டனர்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கான மூன்றாம் கட்ட பணிகள் நிறைவு

