சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் கலைக் கண்காட்சி ஒன்று நேற்று தொடங்கியது. 'எக்பிரசன்ஸ் த்ரூ ஆர்ட்' என்னும் அந்தக் கண்காட்சி இம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான 21 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்களும் அவர்கள் படைத்த சிற்பங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சிங்டெல் ஏற்று நடத்தும் இப்
படியொரு கண்காட்சி சிங்கப்பூரில் நடைபெறுவது இதுவே முதல்முறை.
இங்கு வைக்கப்பட்டுள்ள படைப்புகளில் கெனோசியன் பள்ளியைச் சேர்ந்த ரெக்ஸ் சான் என்னும் 12 வயது மாணவர் வரைந்த 'அக்ரிலிக்' ஓவியம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. சாம்பலிலிருந்த உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை ஓவியத்தை அவர் வரைந்திருந்தார்.
'ஹேரி பாட்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஃபாக்ஸ்' என்னும் ஃபீனிக்ஸ் பறவை இதனை வரையத் தூண்டியதாக அந்த மாணவர் தெரிவித்தார்.
செவித்திறனை இழந்த ரெக்ஸ், "நான் எப்போதும் வலிமை பெற்றவனாகவும் எல்லாவிதமான தடங்கல்களையும் எதிர்கொள்பவனாகவும் இருக்க வேண்டும்; பிரச்சினைகளைச் சமாளித்துத் தீர்வு காணவேண்டும் என்னும் எண்ணத்தை அந்தப் பறவை எனக்குள் விதைத்தது. மேலும், வரைவது என்பது என் மனதை எளிமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன்மூலம் எனது மனச்சுமைகளை இறக்கி வைக்க முடிகிறது," என்றார்.
இந்தப் பள்ளியின் கலைப் பிரிவு ஆசிரியர் செரினா லீ, 49, தமது மாணவர்கள் கலைகள் மூலம் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்றார்.
அதிபர் ஹலிமா யாக்கோப், நேற்று இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மானும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இயலாதவர்களுக்கு உதவ அதிகமான நிறுவனங்கள் முன்
வரும் என்று தாம் நம்புவதாக அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.
"நாம் ஒரு தேசமாக வளர்ச்சிபெறுகையில், எந்தவொரு சமூகமும் பின்தங்கிவிடாதவாறு பன்
முகத்தன்மையுடன் செயல்படு
வதைத் தொடருவது அவசியம்," என்றும் அவர் தெரிவித்தார்.