சிங்கப்பூரில் அண்மைய வாரங்களாக சளிக்காய்ச் சல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்ற னர். கொவிட்-19கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பார்க்வே ஷென்டன் மருத்துவ நிலையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எட்விக் சிங் கூறுகையில், தமது குழுமத்துக்கு உட்பட்ட
30 பொது மருந்தகங்களில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் கடந்த மாதத்தைக் காட்டி லும் 25 விழுக்காடு கூடி இருப்பதாகத் தெரிவித்தார்.
அதேபோல, கொவிட்-19 தொற்றுக்குத் தொடர்பில் லாத சுவாசத்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தமது
எட்டு மருந்தகங்களில் ஜூலை மாதத்தைவிட
20 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக நார்த்ஈஸ்ட் மருத்துவக் குழுமத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் டான் டெக் ஜேக் தெரிவித்துள்ளார்.

