அரிய கலைப்பொருள் மீட்பு

அரிய கலைப்பொருள் மீட்பு

1 mins read
ac6a8f5f-5c15-4625-a47a-bd19fab46480
லிங்க வடிவத்தின்மீதான செப்புக்கவசம் 1636ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திரு­டப்­பட்­ட­தாக நம்­பப்­படும் நேப்­பாள கலைப்­பொ­ருள் ஒன்றை தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் நடை­மு­றை­

க­ளுக்கு இணங்க ஆசிய நாக­ரி­க அரும்­பொ­ரு­ள­கம் கைப்­பற்றியதாக அதன் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார். இருப்­பி­னும் அது எவ்­வாறு கைப்­பற்­றப்­பட்­டது என்ற கேள்­விக்கு அரும்­பொ­ரு­ள­கம் பதில் அளிக்­க­வில்லை.

இது தொடர்­பாக நேற்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளு­டன் பேசிய பேச்­சா­ளர், இந்­துக் கட­வு­ளான சிவ­னின் தோற்­றம் கொண்ட சமய கலைப்­பொ­ருள் திரு­டப்­பட்­டது என்­பதை அரும்­பொ­ரு­ள­கம் அறிந்­தி­ருந்­ததா­கக் கூறி­னார்.

செப்பு உலோ­கக் கவசத்துட னான கலைப்­பொ­ருளை

2015ஆம் ஆண்டு, தேசிய மர­பு­டைமை வாரி­யத்­தின் கைப்­பற்­று­தல் தொடர்­பான நடை­மு­றை­க­ளுக்கு இணங்க ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கம் கைப்­பற்­றி­ய­தாக பேச்­

சா­ளர் குறிப்­பிட்­டார்.

கல்­லால் செதுக்­கப்­பட்ட லிங்க உரு­வத்­தின் மீது 386 ஆண்டு பழமை வாய்ந்த செப்­புக் கவ­சம் பொருத்­தப்­பட்­ட­தாக அரும்­பொ­ரு­ள­கம் அந்­தக் கலைப்­பொ­ரு­ளின்கீழ் எழுதி வைத்­துள்­ளது.