ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் மீண்டும் தீ

ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் மீண்டும் தீ

1 mins read
97d61bbb-0cd1-47a0-bb9c-dc190f77e3c2
விபத்து நிகழ்ந்த வீட்டிலிருந்து தீக்கிரையானவற்றை நேற்று அப்புறப் படுத்திய நகர மன்ற ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் ஈஸ்ட்­டில் தீ விபத்­தால் உயி­ரி­ழப்பு ஏற்­பட்ட வீட்­டில் நேற்­று காலை மீண்­டும் தீப்­பி­டித்­தது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 21, புளோக் 236ன் ஒன்­ப­தாம் தளத்­தில் அமைந்­துள்ள அவ்வீட்­டில் ஏற்­பட்ட இரண்­டா­வது தீச்­சம்­ப­வம் குறித்து நேற்று அதி­காலை 5 மணி அள­வில் தக­வல் கிடைத்­தது என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அந்­நா­லறை வீட்­டின் படுக்கை அறை ஒன்­றில் தீப்­பி­டித்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது. சிதி­லக் குவி­யல்­களின் அடிப்­ப­கு­தி­யில் இருந்த தணலே அதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது. இத­னை­ய­டுத்து, தீய­ணைப்­பா­ளர்­கள் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்து தீயை அணைத்­த­னர்.

அதி­காலை 5 மணி­ய­ள­வில் புகை வாடையை உணர்ந்­த­தா­கக் கூறி­னார் அக்­கு­டி­யி­ருப்­பின் 8ஆம் தளத்­தில் வசிக்­கும் திரு­வாட்டி லிம், 44.

"அதே வீட்­டி­லி­ருந்­து­தான் புகை வரு­வ­தாக நினைத்­தோம். ஆனா­லும், நேற்­று­போல் (நேற்று முன்­தினம்) தீ மோச­மாக இருக்­கும் என்று நான் நினைக்­க­வில்லை. இருப்­பினும், நாங்­கள் வீட்டைவிட்டு வெளி­யேறி, கீழே சென்றுவிட்­டோம்," என்­றார் அவர்.

நேற்று முன்­தி­னம் அதி­காலை நேரத்­தில் அவ்­வீட்­டில் நிகழ்ந்த தீ விபத்­தில் 48 வயது ஆட­வர் ஒரு­வர் மாண்­டு­போ­னார். அவ்­வீட்­டில் வசித்த இன்­னொ­ரு­வர், தீய­ணைப்­புப் படை­யி­னர் வரு­முன்னே அங்­கி­ருந்து தப்பி வெளி­யே­றி­னார்.