அதிரடிச் சோதனைகள் குறித்து துப்பு தந்த ஆடவருக்குச் சிறை

அதிரடிச் சோதனைகள் குறித்து துப்பு தந்த ஆடவருக்குச் சிறை

1 mins read
c89124c2-a30a-4776-807f-43027b34896d
-

இர­வுக் கேளிக்கை நிலை­யங்­களில் ஒழுங்­கு­மு­றைப் பாது­கா­வ­ல­ராக (பவுன்­சர்) வேலை­செய்த ஒரு­வர், அங்கு காவல்­து­றை­யி­னர் அதி­ர­டிச் சோதனை நடத்­தி­னால் அல்­லது அப்­ப­கு­தி­யில் காவல்­துறை வாக­னங்­க­ளைக் கண்­டால், அது­பற்றி மற்ற கேளிக்கை விடு­தி­க­ளுக்­குத் துப்பு தரு­வார். இதன்­மூ­லம் காவல்­து­றை­யி­னர் வரு­முன் அந்தக் கேளிக்கை நிலை­யங்­கள் தங்­க­ளது முறை­யற்ற நட­வ­டிக்­கை­களை மறைத்­துக் கொள்ள முடி­யும்.

இரண்டு வாட்ஸ்­அப் குழுக்­களின் உறுப்­பி­ன­ரான ஏரன் சுவா ஜுன் ஹாவ் என்ற அந்த 26 வயது ஆட­வர், 2019 ஜன­வரி - 2020 பிப்­ர­வரிக்கு இடையே இப்­படி 60 துப்­புத் தக­வல்­களை அனுப்­பி­னார்.

முன்­ன­தாக, 2019 ஜூலை­யில் ஏரன் தனது காரால் இன்­னொ­ரு­வர்­மீது மும்­முறை மோதிய குற்­றச் சாட்­டும் மெய்ப்­பிக்­கப்­பட்­டது. மொத்­தத்­தில் தன்­மீ­தான எட்­டுக் குற்­றச்­சாட்­டு­களை ஏரன் ஒப்­புக்­கொண்­டார்.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ர­ரான ஏர­னுக்கு நேற்று 17 வாரச் சிறைத் தண்­ட­னை­யும் 3,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

மற்ற குற்­ற­வி­யல் வழக்­கு­கள் குறித்­துப் புல­னாய்வு செய்­த­போது அவ்­விரு வாட்ஸ்­அப் குழுக்­க­ளைக் காவல்­து­றை கண்­டு­பி­டித்­த­து.

'நைட் அவுல்', 'அங்­கிள்­வே­லட்' என்ற அவ்­விரு குழுக்­க­ளி­லும் பெரும்­பா­லும் 'பவுன்­சர்'களும் மற்ற இர­வுக் கேளிக்கை நிலை­யங்­க­ளின் ஊழி­யர்­களும் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தாங்­கள் கண்ட காவல்­துறை வாக­னங்­க­ளின் பதி­வெண்­கள், சோத­னை­யி­டங்­கள், அம­லாக்­கக் குழு­வில் எத்­தனை பேர் உள்­ள­னர் உள்­ளிட்ட விவ­ரங்­களை சங்­கே­தச் சொற்­கள் மூலம் அக்­குழு உறுப்­பி­னர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

'நைட் அவுல்' குழு­வின் உறுப்­பி­னர்­க­ளா­கச் சந்­தே­கிக்­கப்­படும் மேலும் எட்­டுப் பேர் தங்­க­ளது குற்­றங்­களை நாளை ஒப்­புக்­கொள்­ள­ இ­ருப்­ப­தா­கக் கூறப்படுகிறது.