நால்வர்மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

நால்வர்மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

2 mins read
1c6cf5bf-00c8-46e3-b501-8645771df44d
-

ஒவ்­வொரு முறை­யும் $100,000 வரை முறை­கேடு செய்­வ­தற்­கான சதித்­திட்­டத்­தில் பங்­கெ­டுத்­த­தா­கக் கூறி 'வயர்­கார்டு ஏஷியா ஹோல்­டிங் (டபிள்­யூ­ஏ­எச்)' நிறு­வ­னத்­தின் முன்­னாள் ஊழி­யர்­கள் மூவர்­மீ­தும் இன்­னொரு நிறு­வ­னத்­தின் இயக்கு­நர்­மீ­தும் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்டது.

சீ லீ வீ, 29, ஜேம்ஸ் ஏகா வர்­தானா, 39, சாய் ஆய் லிம், 43, ஆகிய மூவர் வயர்­கார்டு நிறு­வனத்­தின் முன்­னாள் ஊழி­யர்­கள். நான்­கா­ம­வ­ரான 66 வயது ஹென்ரி இயோ சியூ ஹாய், 'ஜேக்­கப்­சன் ஃபார்ஈஸ்ட் மார்க்­கெட்­டிங் சர்­விசஸ்' நிறு­வ­னத்­தின் இயக்கு­நர்.

அவர்­கள் ஒவ்­வொ­ரு­வர்­மீ­தும் இரண்டு முதல் ஒன்­பது குற்­றச்­சாட்­டு­கள்­வரை சுமத்­தப்­பட்­டன. வர்­தானா மட்­டும் இந்­தோ­னீ­சி­யர். மற்ற மூவ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள்.

ஜெர்­மானியக் கட்­ட­ணச் செய­லாக்க நிறு­வ­ன­மான 'வயர்­கார்டு ஏஜி'யின் துணை நிறு­வ­ன­மாக 'டபிள்­யூ­ஏ­எச்' சிங்­கப்­பூ­ரில் செயல்­பட்டு வரு­கிறது.

அதன் முன்­னாள் கட்­டுப்­பாட்டு, நிதித் துணைத் தலை­வ­ரான திரு எடோ கர்­னி­யா­வன் என்­ப­வ­ரு­டன் சேர்ந்து, அந்­நால்­வ­ரும் 2018ஆம் ஆண்­டில் சதிச் செய­லில் இறங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­கள் புரிந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் குற்­றச் செயல்­கள் தொடர்­பான விசா­ர­ணை­ தொடங்­கும் முன்­னரே திரு கர்­னி­யா­வன் சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யே­றி­விட்­டார். அவர்­மீது கைதாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அவர் எந்­நாட்­ட­வர் என்ற விவ­ரம் நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

வயர்­கார்டு வழக்­குத் தொடர்­பில் ஏற்­கெ­னவே மூவர்­மீது நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டு உள்­ளது.

பிரிட்­டிஷ்­கா­ர­ரான ஜேம்ஸ் ஹென்ரி ஓசல்­லி­வன், 47, 'சிட்­டா­டெல் கார்ப்­ப­ரேட் சர்­விசஸ்' எனும் உள்­ளூர் கணக்­கி­யல் நிறு­வ­னத்­தின் முன்­னாள் இயக்­கு­நர் ஆர்.சண்­மு­க­ரத்­னம், 56, 'ஸ்ட்­ரேட்­ட­ஜிக் கார்ப்­ப­ரேட் இன்­வெஸ்ட்­மென்ட்ஸ்' நிறு­வ­னத்­தின் முன்­னாள் இயக்கு­நர் தில­க­ரத்­னம் ராஜ­ரத்­னம், 58, ஆகி­யோர் மீதான வழக்­கு­கள் நிலு­வை­யில் இருக்­கின்­றன.