பெண் குளிப்பதை காணொளி எடுத்தவருக்குச் சிறை

பெண் குளிப்பதை காணொளி எடுத்தவருக்குச் சிறை

2 mins read
da79047d-cb27-4f5d-8bcd-2d13e67591cb
-

அண்­டை­வீட்­டுக்­கா­ரர் குளிப்­பதை அவ­ருக்­குத் தெரி­யா­மல் பார்க்க அந்த வீட்­டின் மாடி முகப்பு வழி­யாக ஏறி வீட்­டிற்­குள் நுழைந்­தார் முன்­னாள் வழக்­க­றி­ஞ­ரான 32 வயது நிக்­க­லஸ் இயோ ஷாவ் யி.

இவ்­வாறு அவர் இரண்டு முறை செய்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இயோ­வின் அண்­டை­வீட்­டுக்­கா­ரப் பெண் 20 வய­துக்­கும் 30 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்.

அவர் குளிப்­பதை இயோ ஒரு­முறை காணொளி எடுத்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இயோ­வுக்கு 12 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அண்டைவீட்டுக்காரர் குளிப்பதைப் பார்தததாகவும் அதைக் கைபேசி கொண்டு காணொளி எடுத்ததாகவும்அ வர் ஒப்­புக்­கொண்­டார்.

இந்­தக் குற்­றத்தை இயோ 2020ஆம் ஆண்­டில் புரிந்­தார். அவ்­வாண்டு ஏப்­ரல் மாதத்­தி­

லி­ருந்து ஜூன் மாதம் வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கிரு­மிப்

பர­வல் முறி­ய­டிப்பு திட்­டத்­தால் வேலை தொடர்­பாக மன­வு­ளைச்­சல் ஏற்­பட்டு இயோ இக்­குற்­றங்­க­ளைப் புரிந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது அவர் ஆலன் அண்ட் கிளேட்­ஹில் எனும் பிர­பல சட்ட நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்­தார். அந்த வேலை­யி­லி­ருந்து அவர் வில­கி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்க அவ­ரது பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 23ஆம் தேதி­யன்று அப்­பெண் குளிப்­பதை இயோ காணொளி எடுக்க முயன்­ற­போது கையும் கள­வு­மா­கச் சிக்­கி­னார்.

இயோ காணொளி எடுக்­கத் தொடங்­கு­வ­தற்கு முன்பு, அப்­பெண் அவ­ரைப் பார்த்­து­விட்­ட­தா­க­வும் பதற்­றத்­தில் அல­றி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இயோ உட­ன­டி­யாக தமது வீட்­டிற்­குத் தப்பி ஓடி­னார். பாதிக்­கப்­பட்ட பெண்­ணும் அவ­ரது கண­வ­ரும் கோபத்­து­டன் இயோ­வின் வீட்­டிற்­குச் சென்­ற­னர். இயோ அவர்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்­டார்.

இயோ­வின் கைபே­சியை அப்­பெண் எடுத்­துப் பார்த்­த­தா­க­வும் அதில் முறை­யற்ற காணொ­ளி­கள் எது­வும் இல்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், அவர் காவல்­

து­றைக்­குத் தக­வல் தெரி­வித்­தார்.

இயோ­வுக்­குச் சொந்­த­மான இரண்டு மடிக்­க­ணி­னி­க­ளை­யும் நான்கு ஐஃபோன்­க­ளை­யும் காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு முன்பு அப்­பெண் குளிப்­பதை இயோ காணொளி எடுத்து அந்­தப் பதிவை நீக்­கி­யது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.