அல்ஜுனிட் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்று(ஆகஸ்ட் 18) தீ மூண்டது. அதனைத் தொடர்ந்து 13 பேர் அந்த கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அப்பர் அல்ஜுனிட் லேன் புளோக் 3ன் ஆறாம் மாடி வீட்டின் வரவேற்பு அறையில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவத்தியால் தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தீச்சம்பவம் பற்றி காலை 7.05 மணிக்குத் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை வருவதற்குள் புளோக்கில் உள்ள மூவர் சுயமாகவே வெளியேறிவிட்டனர். அருகில் உள்ள வீடுகளிலிருந்து 10 பேர் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட வீட்டில் தனியாக வசிக்கும் திருவாட்டி டியோ பொங் சீ,75, அதிகாலை உடற்பயிற்சி செய்துவிட்டு வழிபாட்டு மேடையில் ஒரு மெழுகுவத்தியை ஏற்றி வைத்ததாகக் கூறினார்.
ஐந்து நிமிடம் ஏற்றி வைத்த சிறிய ஒரு மெழுகுவத்தியால் ஒரு வீடே அழிந்துவிடும் என்று சிறிதும் நினைக்கவில்லை என்றார் அவர்.