கேரோசல் இணைய விற்பனை மோசடியில் 10 பேர் $17,000 இழப்பு

கேரோசல் இணைய விற்பனை மோசடியில் 10 பேர் $17,000 இழப்பு

2 mins read
dec61e51-fdd7-408f-a3b0-c792b7d52ceb
-

கேரோ­சல் இணைய விற்­ப­னைத் தளத்­தில் மீண்­டும் மோசடி நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற மாதத்­தி­லி­ருந்து பத்­துக்­கும் மேற்­பட்­டோர் இதில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மோச­டிக்­கா­ரர்­கள் இவர்­க­ளி­டம் கிட்­டத்­தட்ட 17,000 வெள்­ளி­யைச் சுருட்­டி­ய­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

மோச­டிக்­கா­ரர்­கள் முத­லில் இந்த மின்­வர்த்­த­கத் தளத்­தில் விற்­ப­னைக்கு என்று குறிப்­பி­டப்­பட்ட பொருளை வாங்க விரும்­பு­வ­தாக அணு­கு­வர். பின்­னர் 'ஃபெட்எக்ஸ்' அல்­லது 'சிங்­போஸ்ட்' மூலம் பொரு­ளைப் பெற்­றுக்­கொள்ள விரும்­பு­வ­தா­கக் கூறு­வர்.

இவ்­வாறு கட்­ட­ணத்­தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இணை­யத் தொடர்பு முக­வ­ரியை அனுப்பி அதில் வங்கி விவ­ரங்­க­ளைப் பதி­யும்­படி சொல்­லு­வர்.

இத்­த­கைய இணைய முக­வ­ரி­கள் பாதிக்­கப்­பட்­ட­வரை மோசடி இணை­யத் தளத்­திற்கு இட்­டுச்­சென்று மறைச்­சொல் போன்ற முக்­கிய விவ­ரங்­க­ளைக் கேட்­டுப் பெற்றுக்கொள்ளும்.

பாதிக்­கப்­பட்­ட­வர் வங்­கிக் கணக்­கில் தனது அனு­ம­தி­யின்றி பணம் பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டதை அறிந்த பிறகே தான் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்து கொள்­வார்.

இத்­த­கைய மோச­டி­கள் குறித்து பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்று காவல்­துறை நினை­வு­றுத்­தி­யது.

இணை­யத்­தில் அறி­மு­க­மா­வோ­ரின் விவ­ரங்­க­ளைக் கவ­னத்­து­டன் சரி­பார்க்­கும்­ப­டி­யும் தெரி­யா­த­வர்­க­ளி­டம் வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள் போன்ற முக்­கி­ய­மான தக­வல்­க­ளைப் பகிர வேண்­டாம் என்­றும் ஆலோ­சனை கூறப்­பட்­டது.

ஏமாற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வந்­தால் உட­ன­டி­யாக வங்­கிக்­கும் காவல்­து­றைக்­கும் தக­வல் தெரி­விக்­கும்­படி பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

இத்­த­கைய மோச­டிக் குற்­றங்­கள் குறித்த விவ­ர­ம­றிந்­தோர் காவல்­து­றை­யின் 24 மணி நேரத் தொலை­பே­சிச் சேவையை 1800-255-0000 என்ற எண்­ணில் அழைத்து விவ­ரங்­க­ளைக் கூற­லாம். அல்­லது இணை­யத்­தி­லும் இந்த விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­ய­லாம்.

அவ­சர உதவி ஏதும் தேவைப்­பட்­டால் 999 என்ற எண்­ணில் காவல்­து­றையை நாட­லாம்.