கில்பர்ட் கோ என்று அழைக்கப்படும் கோ கியோ வா, 61, (படம்) என்னும் பொதுநல ஆர்வலர் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட $3,200 அபராதத்தை முழுமையாகச் செலுத்தத் தயாராக இல்லை என அறியப்படுகிறது.
காலாங் ரோட்டிலுள்ள குடி
நுழைவு, சோதனைச் சாவடி ஆணையக் கட்டடத்திற்கு வெளியே கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி அனுமதியின்றி நடத்தப்பட்ட பொது ஒன்றுகூடலில் பங்கேற்றதற்காக நேற்று கோவுக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த ஒன்றுகூடலில், "இந்தியாவிலிருந்து வரும் எல்லா விமானங்களையும் தயவுசெய்து தடை செய்யுங்கள். நாம் இனவாதி அல்ல. எச்சரிக்கையுடன் இருக்க இந்தக் கோரிக்கை," என்று பொருள்படக்கூடிய வாசக அட்டையை கோ ஏந்தி இருந்தார். பின்னர், ஒன்றுகூடலில் தமது நடவடிக்கை தொடர்பான படங்களை ஃபேஸ்புக்கில் அவர் பதிவேற்றினார்.
இந்தியாவில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்த நேரம் அது. அதனால் இந்தியாவிலிருந்து வரக்கூடிய எல்லா நீண்டகால, குறுகியகால அனுமதி அட்டைதாரர்களுக்கும் சிங்கப்பூர் 14 நாள்கள் தடை விதித்திருந்தது.
அனுமதிபெறாத ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த கோ, அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட மறுத்தார். அதற்காக அவருக்குக் கூடுதலாக $1,200 அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், மொத்த அபராதத் தொகையில் $2,000ஐ மட்டும் செலுத்த தமது கட்சிக்காரர் தயாராக இருப்பதாக தற்காப்பு வழக்
கறிஞர் லிம் தியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சிய தொகை $1,200ஐ கட்டத் தவறினால் அதற்கு ஈடாக மூன்று நாள்களை கோ சிறையில் கழிக்கவேண்டி வரும்.

