சிங்கப்பூரில் $8.9 மில்லியன் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 226 ஆண்களிடமும் 99 பெண்களிடமும் காவல்
துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள், பொதுமக்கள் அளித்த 943 மோசடிப் புகார்களில் சம்பந்தப்பட்டவர்களாகவோ அல்லது மோசடிக்கு உதவியவர்களாகவோ இருக்கலாம் என சந்தேகிக்கப்
படுகிறது.
இதனை காவல்துறை நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 16 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 18 வரை இருவார காலம் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பிடிபட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பண மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இன்றி பணமளிப்புச் சேவை போன்ற வற்றில் ஈடுபட்ட சந்தேகத்திற்காக இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மோசடிக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்திற்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், $500,000 வரையிலான அபராதம் தனித்தோ அல்லது சிறைத் தண்டனையுடன் சேர்த்தோ விதிக்கப்படலாம்.
உரிமம் இன்றி பணமளிப்பு வர்த்தகம் செய்தால் $125,000 வரையிலான அபராதம், மூன்றாண்டு வரையிலான சிறை ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளையும் கைபேசி
களையும் பயன்படுத்த யாராவது வேண்டுகோள் விடுத்தால் அதனை ஏற்கவேண்டாம் என்றும் அவற்றைப் பயன்படுத்தி நடைபெறும் குற்றங்
களுக்கு வங்கிக் கணக்கு மற்றும் கைபேசிக்கு உரியவர்களே தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மோசடிச் சம்பவங்களில் $633.30 மில்லியனை பொதுமக்கள் இழந்தனர்.
இது, 2020ஆம் ஆண்டைக் காட் டிலும் கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம்.
அந்த ஆண்டில் ஏமாற்றப்பட்ட தொகை $268.4 மில்லியன்.
சிங்கப்பூரில் நிகழும் மோசடிச் சம்பவங்களில் 90 விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுபவை.
மொத்த மோசடிச் சம்பவங்களில் பெரும்பாலானவை வேலை மோசடி, இணைய ஊடுருவல், முதலீட்டு மோசடி ஆகியன என்று தெரிவிக்கப்படுகிறது.
எளிதான, வீட்டிலிருந்து செய்யப்படும் வேலைக்கு அதிக ஊதியம் தருவதாகப் பொய் கூறி பணம் கரந்து மோசடி செய்தல், பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாக பாசாங்கு செய்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அந்தக் கணக்கில் ஊடுருவிப் பணத்தைத் திருடுதல் போன்றவை அதிகமாக நிகழும் மோசடிச் சம்பவங்கள்.