400,000 மரங்கள் நடப்பட்டன

400,000 மரங்கள் நடப்பட்டன

2 mins read
c704792c-28a0-4618-9069-e129d5be9880
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் நேற்று தங்கள் வளாகத்தில் 100 அரிய மரக்கன்றுகளை நட்டனர். படம்: சாவ்பாவ் -

2030 வாக்கில் மேலும் 1 மில்லியன் மரங்கள் இயக்கத்தின்கீழ் பசுமைவளம்

சிங்­கப்­பூ­ரில் 2030ஆம் ஆண்டு வாக்­கில் தீவு முழு­வ­தும் புதி­தாக ஒரு­ மில்­லி­யன் மரங்­களை நட­வேண்­டும் என்ற இலக்­கோடு ஓர் இயக்­கம் தொடங்­கப்­பட்டுள்ளது.

அந்த இயக்­கத்­தின்­கீழ் இது­வரை­ ஏறக்­கு­றைய 400,000 மரங்­கள் நடப்­பட்டு இருக்­கின்­றன. பள்­ளிக்­கூ­டங்­கள், குடி­யி­ருப்பு, தொழிற்­பேட்­டை­கள் போன்ற இடங்­களில் அவை வளர்ந்து வரு­கின்­றன.

இதற்கு 61,000க்கும் மேற்­பட்ட சமூ­கத்­தி­னர் உதவி இருக்­கி­றார்­கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார். அவர், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நேற்று நடந்த மரம் நடும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

'மேலும் மில்­லி­யன் மரங்­கள்' இயக்­கம் 2020 எப்­ர­லில் தொடங்­கப்­பட்­டது. சிங்­கப்­பூரை பசுமை வள நக­ராக உரு­மாற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளின் முக்­கிய அங்­க­மாக அந்த இயக்­கம் திகழ்­கிறது என்பதை திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரின் நகரச் சூழலை மேம்­ப­டுத்தி பரு­வ­நிலை மாற்ற பாதிப்­பு­க­ளுக்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் பசுமை வளத்தை மேம்­படுத்­தும் நோக்­கத்­தில் மில்­லி­யன் மரங்­கள் இயக்­கத்தை தேசிய பூங்­காக் கழ­கம் தொடங்­கி­யது.

இந்த தேசிய இலக்கை நிறை­வேற்ற உத­வும் வகை­யில், நேற்று நன்­யாங் அவென்யூ நெடு­கி­லும் உள்ள தங்­கள் வளா­கத்­தில் இந்­தப் பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் மொத்­தம் 100 அரிய மரக்­கன்­று­களை நட்­ட­னர்.

இந்­தப் பல்­க­லைக்­க­ழக மரம் நடும் திட்­டத்­திற்கு மாண­வர்­கள் தலை­மை­யி­லான 'எர்த்­லிங்க்' என்ற சுற்­றுச்­சூ­ழல் அமைப்பு வழி­காட்டி உத­வு­கிறது.

அடுத்த ஏழாண்­டு­களில் வளா­கத்­தி­லும் வளா­கத்­தைச் சுற்­றி­லும் மேலும் மரங்­களை நடு­வ­தற்­கான திட்­டம் இருப்­ப­தாக பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்­தது.