குடும்பங்களுக்கு $3,700 வரையிலான உதவித்தொகை

அனைத்து சிங்கப்பூரர்களும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் உதவிசெய்யும். அன்றாட செலவினங்களை சமாளிக்க அனைத்து குடும்பங்களுக்கும் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட $180 மில்லியன் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் லீ சியன் லூங் இன்று(ஆகஸ்ட் 21) தேசிய தின பேரணியின்போது தாம் ஆற்றிய சீன உரையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் $3,700 வரையிலான உதவித்தொகை வழங்கப்படும்.

வரும் 12 மாதங்களுக்கு அரசாங்கம் வழங்கவிருக்கும் உதவித் திட்டங்கள்:

  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மாதம் $1400 ரொக்கம் அளிக்கப்படும்
  • அக்டோபரில் $190 வரையிலான யூ-சேவ்(U-save) தள்ளுபடி
  • ஜனவரி 2023ல் கூடுதல் சமூக மேம்பாட்டு மன்ற(CDC) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
  • பிப்ரவரி 2023ல் மெடிசேவ் கணக்கில் $300 நிரப்புத்தொகை

ஒவ்வொரு குடும்பத்தின் வருமானம், வீட்டு வகையைப் பொருத்து உதவி வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்தாண்டு மார்ச் முதல், உத்தரவாத தொகுப்புத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்களுக்கு உதவி வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!