சமுதாயத்தில் நிலவும் நம்பிக்கையே காரணம்

சமுதாயத்தில் நிலவும் நம்பிக்கையே காரணம்

2 mins read
26f9664a-6c3d-4f4f-9ec3-ab74f919cc8d
-

கொவிட்-19 கொள்­ளை­நோயை சிங்­கப்­பூர் எதிர்­கொண்ட விதம் குறித்து தேசிய தினப் பேர­ணி­யில் தொகுத்­துப் பேசிய பிர­த­மர் லீ சியன் லூங், நோய்ப் பர­வ­லின் பாதிப்­பு­களை சிங்­கப்­பூர் சிறப்­பா­கக் கையாண்டு, இந்­நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில் நல்ல முன்­னேற்­றம் கண்­டுள்­ளது என்­றார்.

கொரோனா பரவலின் ஒவ்வொரு அலையின் பாதிப்பையும் மேலும் திறம்பட சிங்கப்பூர் சமாளித்தது. நோய் பரவலை தாமதப்படுத்தியது. ஒமிக்­ரான் பிஏ.5 அலை இப்­போது தணிந்து வரு­கிறது.

இது­வரை, சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொடர்­பான இறப்­பு­க­ளின் எண்­ணிக்கை 1,600க்கும் குறை­வா­கவே உள்­ளது. மற்ற நாடு­க­ளைப் போல இறப்பு நிகழ்ந்­தி­ருந்தால், சிங்­கப்­பூர் இப்­போது 10,000 அல்­லது அதற்கு மேற்­பட்ட இறப்­பு­களை எளி­தில் சந்­தித்­தி­ருக்­க­க்கூடும். ஒன்றுபட்ட முயற்சிகள் பல உயிர்களைக் காத்தன என்று பிர­த­மர் குறிப்பிட்டார்.

சமு­தா­யம் அரசாங்கத்தின் மீது பெரு­ம­ள­வில் நம்­பிக்கை கொண்­டி­ருப்­பதே சிங்­கப்­பூ­ரின் இந்த வெற்­றிக்கு முக்­கி­யக் கார­ணம்.

எடுத்­துக்­காட்­டாக, சில நாடு­க­ளைப் போலல்­லா­மல், சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­கள் முகக்­க­வ­சம் அணி­யும் விதி­மு­றை­களை எவ்­வாறு ஏற்று நடந்­தார்­கள் என்­பதை திரு லீ சுட்­டி­னார்.

சரி­யான முறை­யில் செயல்­பட்டு, அடுத்­த­வ­ரின் ஆத­ர­வைப் பெறு­வ­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே காணப்­படும் நம்­பிக்­கைக்­கும் பிர­த­மர் லீ ஐந்து எடுத்­துக்­காட்­டு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்:

1. அர­சாங்க அறி­விப்­பின்­படி தங்­க­ளின் முறை வரும்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­தல்.

2. முகக்­க­வ­சம் அணி­தல், குறிப்­பாக உட்­புற இடங்­களில்

3. வீட்­டிற்கு வந்த பிறகு கைக­ளைக் கழு­வு­தல்.

4. ஏஆர்டி கரு­வி­களை நிபு­ணத்­து­வத் திறனுடன் பயன்­ப­டுத்­திக் கிரு­மிப் பரி­சோ­தனை செய்­தல்.

5. ஏஆர்டி கரு­வி­யில் இரு சிவப்பு கோடு­கள் தோன்­றி­னால் மற்­ற­வர்­க­ளைப் பாது­காக்­கத் தன்­னைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளு­தல்.

கொவிட்-19 மீள்திறன் பதக்கம்

கொள்­ளை­நோய்ப் பர­வ­லின்­போது கொவிட்-19 உடன் நேர­டி­யா­கப் போராட உத­வி­ய­வர்­க­ளுக்கு 'கொவிட்-19 மீள்­திறன் பதக்­கம்' எனப்­படும் அரசு விருது வழங்­கப்­படும்.

அர­சாங்­கத்­தின் இந்த புதிய விருது, தனி­ம­னி­தர்­கள், குழுக்­கள் என அனைத்து பிரி­வி­ன­ரை­யும் அங்­கீ­க­ரிக்­கும் என்று பிர­த­மர் லீ நேற்று தனது தேசிய தினப் பேரணி உரை­யில் தெரி­வித்­தார்.

கூடு­த­லாக அளப்­ப­ரிய பங்­க­ளிப்பை வழங்­கி­ய­வர்­கள் பாராட்டு விருது, பொதுச் சேவை விருது, பொது நிர்­வாக விருது போன்ற நடப்­பி­லி­ருக்­கும் அரசு விரு­து­களைப் பெறு­வர்.

கொவிட்-19 கொள்­ளை­நோயை எதிர்த்­துப் போரா­டி­ய­தற்­காக இந்­தப் பதக்­கம் வழங்­கப்­பட்­டது என்­பதைக் காட்ட, பெயர், சின்­னத்­து­டன் ஒரு சிறப்­புக் குறிப்­பும் இடம்­பெற்­றி­ருக்­கும் என்று பிர­த­மர் லீ கூறி­னார். விருது பெறு­வோர் பெயர்­கள் ஆண்டு இறு­தி­யில் அறி­விக்­கப்­படும். அடுத்த ஆண்டு விருது வழங்­கும் விழா நடை­பெ­றும்.