சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5, துவாஸ் துறைமுகம், பாய லேபார் விமானத் தளம் என முக்கியக் கட்டமைப்பு திட்டங்களுடன்
கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவருகிறது. சிங்கப்பூர் முனைப்புடன் முன்னேறி வருகிறது என்பதை உலகுக்கு உணர்த்த, இது ஒரு தெளிவான அறிகுறியாக இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் நேற்று தெரிவித்தார்.