2040ல் துவாஸ் துறைமுகம் முழுமை

2 mins read
84871341-e864-4254-995a-f951dfe11099
-

சிங்­கப்­பூ­ரின் மிகப்­பெ­ரிய துறை­மு­க­மாக துவா­ஸின் நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரி­கள் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரும் நிலை­யில், ஆண்டு இறு­திக்­குள் இங்கு மேலும் மூன்று கப்­பல் நிறுத்­தும் இடங்­கள் செயல்­ப­டத் தொடங்­கும்.

இத­னோடு, துவாஸ் துறை­மு­கத்­தில் செயல்­படும் கப்­பல் நிறுத்­தும் இடங்­க­ளின் எண்­ணிக்கை ஐந்­தாக உய­ரும்.

பிர­த­ம­ரின் தேசிய தினப் பேரணி உரை­யு­டன் இணைந்து போக்­கு­வ­ரத்து அமைச்­சும் இந்த அறி­விப்பை நேற்று வெளி­யிட்­டது.

துவாஸ் துறை­மு­கத்­தின் முதற் கட்ட கட்­டு­மா­னத்­தில் இடம்­பெ­றும் இந்த கப்­பல் நிறுத்­தும் இடங்­கள், 20 மில்­லி­யன் இரு­பது அடி அள­வுள்ள கொள்­க­லன்­களை கையா­ளக்­கூ­டிய 21 ஆழ்­க­டல் கப்­பல் நிறுத்­தும் இடங்­கள் ஆகும்.

2040களில் முழு­மை­ய­டை­யும் துவாஸ் துறை­மு­கத்­தின் செயல்­பாட்டை அதி­க­ரிக்­கும் தொடர் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக இவை திறக்­கப்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூர் துறை­முக ஆணை­யம் (பிஎஸ்ஏ), தஞ்­சோங் பகார், கெப்­பல், பிரானி ஆகிய துறை­மு­கப் பகு­தி­களில் உள்ள தனது அனைத்து செயல்­பா­டு­க­ளை­யும் 2027க்குள்­ளும் பாசிர் பாஞ்­சாங் துறை­மு­கத்­தின் செயல்­பா­டு­களை 2040 வாக்­கி­லும் துவா­சுக்கு மாற்­றும். இத­னால், பிர­தான நீர்­மு­கப்பு நிலப்­ப­ரப்பு காலி­யா­கிறது.

இக்­கா­ல­கட்­டத்­தில், துவாஸ் துறை­மு­கம் ஆண்­டுக்கு 65 மில்­லி­யன் கொள்­க­லன்­க­ளைக் கையா­ளும் முழு கொள்­ள­ள­வைக் கொண்­டி­ருக்­கும், இது சிங்­கப்­பூ­ரின் தற்­போ­தைய கொள்­ள­ள­வை­விட இரட்­டிப்­பா­கும்.

தஞ்­சோங் பகா­ரில் உள்ள அனைத்து கொள்­க­லன் செயல்­பா­டு­களும் ஏற்­கெ­னவே துவா­சுக்கு மாற்­றப்­பட்­டு­விட்­டது.

துவாஸ் துறை­மு­கத்­தின் முதல் இரண்டு கப்­பல் நிறுத்­தும் இடங்­களும் கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் விநி­யோ­கச் சங்­கிலி நெருக்­க­டி­யின்­போது துறை­முக நட­வ­டிக்­கை­க­ளின் செயல்­பா­டு­கள் அதி­க­ரித்த வேளை­யில், திறக்­கப்­பட்­டன.

"மற்ற நாடு­களில் துறை­மு­கங்­கள் மூடல்­கள், கடு­மை­யான நெரி­சல், நீண்ட கால தாம­தங்­களை அனு­ப­வித்­த­போ­தும் சிங்­கப்­பூர் எங்­கள் துறை­மு­கம் ஏழு நாள்­களும் 24 மணி நேர­மும் செயல்­பட்­டது. உண்­மை­யில், கடந்த ஆண்டு, சிங்­கப்­பூர் 37.5 மில்­லி­யன் கொள்­க­லன்­க­ளை­யும் கையாண்­டது. உல­கின் பர­ப­ரப்­பான கப்­பல் பரி­மாற்ற மைய­மாக சிங்­கப்­பூர் தனது நிலை­யைத் தக்க வைத்­தி­ருக்­கிறது," என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

"இப்­போ­தி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­களில் துவாஸ் துறை­மு­கக் கட்டு­மா­னம் முழு­மை­யாக நிறை­வ­டை­யும்­போது, உல­கின் மிகப்­பெ­ரிய முழு­மை­யான தானி­யங்கி துறை­மு­கத்தை சிங்­கப்­பூர் பெற்­றி­ருக்­கும். மேலும் அது, கடல்­துறை செயல்­பா­டு­களில் சிங்­கப்­பூரை முன்­ன­ணி­யில் வைத்­தி­ருக்­கும்.

துவாஸ் துறை­மு­கம் முழு­மை­யாக தானி­யங்கி, மின்­னி­லக்கமய­மாக்­கப்­படும்.