திறனாளர்களை ஈர்த்து, தக்கவைக்க புதிய திட்டங்கள்

திறனாளர்களை ஈர்த்து, தக்கவைக்க புதிய திட்டங்கள்

2 mins read
5227c66e-14db-4c68-92fb-a3925b9fcb2d
-

கொவிட்-19க்குப் பிந்­திய உல­கில் சிங்­கப்­பூ­ரின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்த, தலை­சி­றந்த திற­னா­ளர்­களை ஈர்த்து அவர்­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்ள புதிய திட்­டங்­கள் அறி­மு­கம் செய்­யப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

"உல­கெங்­கி­லும் உள்ள தலை­சி­றந்த திற­னா­ளர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தைத் தீவி­ர­மாக பரி­சீ­லிக்க வைக்க நாங்­கள் விரும்­பு­கி­றோம்," என்ற அவர், இதை எட்ட மனி­த­வள அமைச்சு, வர்த்­தக, தொழில் அமைச்சு, பொரு­ளி­யல் அமைப்­பு­கள் விரை­வில் புதிய திட்­டங்­களை அறி­மு­கம் செய்­யும் என்­றார்.

தலை­சி­றந்த திற­னா­ளர்­களை ஈர்க்க சிங்­கப்­பூ­ரி­டம் ஏற்­கெ­னவே திட்­டங்­கள் உள்­ளன. ஆனா­லும், சிறந்த ஆற்­ற­லு­டைய துறை­களில் அது கூடு­த­லா­ன­வற்றை செய்ய வேண்­டும் என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

சிங்­கப்­பூர், உல­கத் தரம்­வாய்ந்த திற­னா­ளர்­களை உரு­வாக்க வேண்டும். ஏனெ­னில், ஒரு நாட்­டின் வெற்­றிக்கு திற­னா­ளர்­களே வித்­தி­யா­சத்தை ஏற்­படுத்தும் காலம் இது என்­றார் அவர்.

தனது சொந்த திற­னா­ளர்­களை உரு­வாக்­க­வும் ஒவ்­வொரு குடி­ம­க­னும் அவ­ரது முழு ஆற்றலை எட்ட உத­வ­வும் சிங்­கப்­பூர் ஆவ­ன செய்து வரு­கிறது என்று சொன்ன அவர், "தலை­சி­றந்த திற­னா­ளர்­கள் என வரும்­போது, நம்­மால் போதும் என்று சொல்­லவே முடி­யாது," என்­றார்.

"எனவே, முத­லீ­டு­களை ஈர்த்து அவற்­றைத் தக்­க­வைத்­துக்­கொள்ள நாம் எப்­படி கவ­னம் செலுத்­து­கி­றோமோ, அதே­போல தலை­சி­றந்த திற­னா­ளர்­களை ஈர்த்து அவர்­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் நாம் கவ­னம் செலுத்த வேண்­டும்," என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

ஜெர்­மனி, பிரிட்­டன் போன்ற நாடு­கள் உல­க­ள­வில் தலை­சி­றந்த திற­னா­ளர்­களை ஈர்க்க முயற்சி எடுத்து வரு­கின்­றன.

"திற­னா­ளர்­களை ஈர்ப்­ப­தற்­கான இந்த உல­க­ளா­விய போட்­டி­யில் சிங்­கப்­பூர் பின்­தங்­கி­வி­டக்­கூ­டாது," என்­றார் அவர்.

உண்­மை­யைச் சொல்­லப் போனால், மிகச் சிறந்த திற­னா­ளர்­களை ஈர்க்க சிங்­கப்­பூ­ருக்கு வாய்ப்பு உள்­ளது. கொவிட்-19ஐ சிங்­கப்­பூர் எதிர்­கொண்­டுள்ள விதம், அது மேலும் தனித்து நிற்க உத­வு­கிறது.

"தரம், நம்­ப­கத்­தன்மை, செய­லாற்­றல் ஆகி­யவை அடங்­கிய நமது நம்­பிக்­கைக்­கு­ரிய சிங்­கப்­பூர் சின்­னம் நமக்கு ஒரு சாத­க­மான நிலையை வழங்­கி­யி­ருக்­கிறது," என்று பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

"சிறந்த திற­னும் ஆற்­ற­லும் உடை­ய­வர்­கள் தாங்­கள் செல்­வ­தற்­கான, தாங்­களும் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரும் பாது­காப்­பாக உண­ரக்­கூ­டிய, தாங்­கள் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இடங்­க­ளைத் தேடி வரு­கின்­ற­னர்," என்­ப­தைப் பிர­த­மர் லீ சுட்­டி­னார்.

இதற்­கி­டையே, "திற­னா­ளர்­கள் உள்ள, அர­சி­ய­லும் கொள்­கை­களும் நிலை­யாக உள்ள, அமைப்பு­முறை வேலை செய்­கிற இடங்­களில் முத­லீடு செய்ய வர்த்­த­கங்­கள் விரும்­பு­கின்­றன," என்­றார் அவர்.

அந்த வகை­யில், திற­னா­ளர்­கள் மற்­றும் அனைத்­து­லக நிறு­வ­னங்­க­ளின் ஆர்­வத்தை ஈர்ப்­ப­தில் சிங்­கப்­பூர் வெற்­றி­க­ர­மாக இருந்து வரு­கிறது.