ஜிஎஸ்டி உயர்வைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவி

ஜிஎஸ்டி உயர்வைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவி

2 mins read
9eae47eb-e5a9-4a4a-975c-d060b5d6a875
சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் உதவிகள் அளிக்கப்படும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் உறுதி அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திட்­ட­மி­டப்­பட்ட ஜிஎஸ்டி உயர்வு இரு கட்­டங்­க­ளாக நடப்­புக்கு வரும். தற்­போது 7 விழுக்­கா­டாக உள்ள ஜிஎஸ்டி 2023 ஜன­வரி 1 முதல் 8 விழுக்­காட்­டுக்­கும் 2024 ஜன­வரி 1 முதல் 9 விழுக்­காட்­டுக்­கும் உயர்த்­தப்­படும்.

ஜிஎஸ்டி உயர்த்­தப்­ப­டு­வ­தால் வாழ்க்­கைச் செல­வி­னம் உய­ரும் என பல­ரும் கவ­லைப்­ப­டு­வ­தைத் தாம் அறிந்­தி­ருப்­ப­தா­கக் கூறிய பிர­த­மர் லீ, உதவி செய்ய அர­சாங்­கம் நட­வ­டிக்­கை­கள் எடுத்­து­ வரு­வ­தா­க­வும் தேவைப்­பட்­டால் கூடு­தல் உத­வி­கள் அளிக்­கப்­படும் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உறுதி அளித்­தார்.

உதா­ர­ண­மாக, சிடிசி பற்­றுச்­சீட்டு எனப்­படும் சமூக மேம்­பாட்டு மன்­றங்­க­ளின் பற்­றுச்­சீட்­டு­கள் அன்­றா­டச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க குடும்­பங்­க­ளுக்கு மட்­டு­மின்றி குடி­யி­ருப்பு வட்­டா­ரக் கடை­கள் உணவு நிலை­யங்­க­ளுக்­கும் உத­வி­ பு­ரி­கின்­றன.

இது­வரை, 18,000க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்பு வட்­டா­ரக் கடை­கள், உணவு நிலை­யங்­கள் மற்­றும் காப்பிக்­க­டை­கள் இந்­தத் திட்­டத்­தில் இணைந்­தி­ருக்­கின்­றன.

பெரும்­பா­லான குடும்­பங்­கள் சிடிசி பற்றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­படுத்தி உள்­ளன. இதற்­காக கிட்­டத்­தட்ட $180 மில்­லி­யன் செல­விடப்­பட்டு உள்­ளது.

இது மட்­டு­மின்றி, படிப்­ப­டி­யாக இதர உத­வி­களும் செய்­யப்­பட்டு வரு­வ­தாக பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

மூவறை வீவக வீட்­டில் வசிக்­கும் இரு பிள்­ளை­க­ளை­யு­டைய தம்­ப­தி­யி­னரை அதற்கு அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.

அந்­தக் குடும்­பம் ஏறக்­குறைய ஒவ்­வொரு மாத­மும் $3,700 உதவியை 12 மாதங்­க­ளுக்­குப் பெறும். அந்­தத் தொகை பின்­வ­ரும் உதவிகளை உள்­ள­டக்­கி­யது.

 இந்த மாதம் அவர்­க­ளுக்கு $1,400 ரொக்­கம் கிடைக்கும்.

 அக்­டோ­ப­ரில் யு-சேவ். சேவை மற்­றும் பரா­ம­ரிப்­புக் கட்டணத் தள்ளு­படியை அக்குடும்­பம் பெறும்.

 அடுத்த ஜன­வ­ரி­யில் $200 சிடிசி பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும். கடந்த மே மாதம் வழங்­கப்­பட்ட $100 சிடிசி பற்­றுச்­சீட்டைத் தொடர்ந்து இது வழங்­கப்­படு­கிறது.  அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் அவர்களின் மெடி­சேவ் கணக்கு­களில் $300 வரவு வைக்­கப்­படும்.

- என்று விவ­ரித்த பிர­த­மர், வரும் நவம்­பர் மாதம் உல­கக் கிண்ண காற்­பந்து நடப்­ப­தை­ ஒட்டி அதிர்ஷ்ட தேவதை ஓய்­வெடுப்­ப­தால் அந்த மாதம் மட்­டும் உதவி இருக்­காது என்று கூட்­டத்­தி­ன­ரின் பலத்த சிரிப்­புக்­கி­டையே தெரி­வித்­தார்.

"இருப்­பி­னும் டிசம்­பர் மாதம் அந்­தத் தேவதை திரும்பி வரும்," என்­றும் திரு லீ கூறி­னார்.

"ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏதோ ஒரு வகை­யில் உதவி கிடைக்­கும். வரு­மான வரம்பு, குடி­யி­ருக்­கும் வீட்­டின் தன்மை ஆகி­ய­வற்­றைப் பொறுத்து உத­வித்­தொகை அமை­யும்," என்­றார் அவர்.

ஜிஎஸ்டி உயர்வை ஈடு­செய்ய உத்தரவாதத் தொகுப்­புத் திட்­டம் அடுத்த ஆண்டு கைகொ­டுக்­கும். $6.6 பில்­லி­யன் மதிப்­பி­லான இந்­தத் திட்­டத்­தின்­கீழ், 21 வய­துக்கு மேற்­பட்ட ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரும் ஐந்­தாண்­டு­க­ளுக்கு $700 முதல் $1,600 வரை ரொக்க உதவி பெறு­வார்.

இதன் முதல் உத­வித்­தொகை வரும் டிசம்­ப­ரி­லேயே வழங்­கப்­படும் என்­றார் பிர­த­மர்.