வலுவான தேசிய அடையாளம், வெளிப்படைத்தன்மை போன்றவை சிங்கப்பூரின் 'நிலையான கட்டாயங்கள்'

வலுவான தேசிய அடையாளம், வெளிப்படைத்தன்மை போன்றவை சிங்கப்பூரின் 'நிலையான கட்டாயங்கள்'

2 mins read
a8200083-77cf-42b5-8e57-0f23b840b276
-

வற்­பு­றுத்­து­தல், பிர­சா­ரம், தவ­றான தக­வல் ஆகி­ய­வற்றை சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­கம் எதிர்­நோக்­கு­வ­தால், நாட்­டின் தேசிய அடை­யா­ளத்தை வலுப்­ப­டுத்­த­வும் சரி­யான புரிந்­து­ணர்­வைக் கட்­டிக்­காக்­க­வும் நமது தேசிய நலன்­கள் 'நிலை­யான கட்­டா­யங்­கள்' ஆக விளங்­கு­கின்­றன என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ர­ராக இருப்­ப­தில் பெருமை கொள்­ளு­த­லும் வலு­வான தேசிய அடை­யா­ளத்­தைக் கொண்­டி­ருப்­ப­தும் பிர­த­மர் குறிப்­பிட்ட மூன்று 'நிலை­யான கட்­டா­யங்­களில்' அடங்­கும்.

"அனைத்து வகை­யான வற்­புறுத்­து­தல், பிர­சா­ரம், தவ­றான தக­வல், கிளர்ச்சி ஆகி­யவை சமூக ஊட­கம், தக­வல் அனுப்­பும் செய­லி­கள் மூலம் சிங்­கப்­பூ­ரர்­க­ளைச் சென்­ற­டை­கின்­றன.

"நாடு­க­ளுக்கு இடையே போட்­டி­கள், பதற்­றங்­கள், பிரச்­சினைகள் என்று வரும்­போது எந்த நாட்­டுக்கு ஆத­ர­வ­ளிப்­பது போன்ற சூழ்­நி­லை­களில் இது­போன்ற வேண்­டாத அம்­சங்­கள் நம்மை மேலும் குழப்­ப­நி­லைக்கு இட்­டுச்செல்­லும்," என்று திரு லீ தமது மாண்­ட­ரின் மொழி உரை­யில் விளக்­கி­னார்.

"'நமக்கு வலு­வான தேசிய அடை­யாள உணர்வு அவ­சி­யம். அப்­போ­து­தான் நமது நாட்டு நிர்­மாண முயற்­சிக்கு ஓர் அர்த்­தம் இருக்கும்," என்று குறிப்­பிட்ட பிரதமர், புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் முன்­னேறும் சிங்கப்பூர் கலந்­து­ரை­யா­டல் திட்­டம் அதற்கு வழி­வ­குக்­கும் என்­றார்.

"உல­க­ம­ய­மா­தல் குறைந்து வரும் வேளை­யி­லும் நாடு­கள் தங்­கள் கொள்­கை­களில் உள்­நோக்கி சென்று தன்­னைப்­பே­ணித்­த­னத்­துக்கு மாறும் வேளை­யி­லும் சிங்­கப்­பூர் தொடர்ந்து வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் உல­கத்­து­டன் இணைப்­பில் இருக்க வேண்­டும்.

"நாம் நமக்­குத் தேவை­யா­ன­வற்றை உற்­பத்தி செய்ய முடி­யாது அல்­லது நாம் உற்­பத்தி செய்­பவற்றை நாமே முழு­மை­யா­கப் பயன்­படுத்­திக்­கொள்ள முடி­யாது. அது கணி­னிச் சில்­லு­க­ளாக இருந்­தாலும் சரி, பெட்ரோ­லிய இர­சா­ய­ன­மாக இருந்­தா­லும் சரி.

"நாம் தொடர்ந்து வாழ்­வ­தற்கு வெளி­நாட்டு முத­லீ­டு­கள், வெளி­நாட்­டுச் சந்­தை­கள், அற்­பு­த­மான போக்­கு­வ­ரத்து மற்­றும் உல­கின் அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் தொடர்­பு­கொள்­ளும் ஆற்­றல் ஆகி­யவை அவ­சி­யம் தேவை," என்­றார்.

"நாம் வேக­மா­ன­வர்­க­ளா­க­வும் விவே­க­மா­ன­வர்­க­ளா­க­வும் ஆர்­வ­ம் உள்­ள­வர்­க­ளா­க­வும் இருந்­தால், இவற்­றில் நமது பங்­கைப் பெறு­வது­டன் மேலும் பல­வற்­றைப் பெறு­வோம்," என்­றும் பிர­த­மர் கூறினார்.