கல்விப் பயணமும் தேசிய சேவையும்

கல்விப் பயணமும் தேசிய சேவையும்

1 mins read
7ade3d1e-1890-4ffa-901d-f946c22c7487
-
multi-img1 of 2

தேசிய சேவை புரிந்­த­தால் படிப்­பில் இடை­வெளி விட­வில்லை என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் விஷால் ஜெய­ராம் (வலம்), 22, கூறி­னார். தேசிய சேவை இல்­லா­ம­லி­ருந்­திருந்தால் நிச்­ச­ய­மா­கத் தன் கல்­விக் காலத்­தில் ஓர் இடை­வெளி விட்­டி­ருப்­பேன் என்று இவர் கூறுகிறார்.

"நான் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் இருந்­த­போது கணி­னிப் பொறி­யி­யல் துறை சார்ந்த படிப்­பைப் படிக்­க­வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தேன். அத­னால் தேசிய சேவை முடித்­த­பின் உடனே அதற்­காக பதி­வும் செய்­து­விட்­டேன். ஆனால் இப்­போது பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வேலைப் பளு கார­ணமாக இடை­வெளி விடத் தோன்­று­கிறது. ஆனால் ஈராண்டுகள் தேசிய சேவையில் கழிந்­து­விட்­ட­தால் இடை­வெளி விடு­வதா எனக் குழப்­ப­மாக உள்­ளது. மன­வு­ளைச்­சல் அதி­க­மா­னால் இடை­வெளி எடுக்க நான் தயார்," என்­றார் விஷால். தேசிய சேவை கட்­டா­ய­மில்லாமல் போனாலும் இடை­வெளி விட விருப்­ப­மில்லை என்­கிறார் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிப் படிப்பை முடித்­துத் தற்­போது தேசிய சேவை புரிந்­து­வ­ரும் சசி­பா­லன் பால­தண்­டா­யு­தம், 21.

"பட்­டக் கல்­வியை முடித்­து­விட்டு வேலை­யில் சேர­வேண்­டும் என்­பதே என் குறிக்­கோள். இடை­வெளி விட்ட பின் மீண்­டும் பள்ளி வாழ்க்­கைக்­குத் திரும்­பு­வது சிக்­க­லாக இருக்­க­லாம்," என்­றார் அவர்.