சர்ச்சைக்குரிய அரசியல் சட்டப்பிரிவு 377ஏ நீக்கும் நாடாளுமன்ற விவாதம்
சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சி, ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக்கும் பிரிவு 377ஏ சட்டத்தை நீக்குவதில் உறுதியாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் அச்சட்டத்தை ரத்து செய்வதற்கான வாக்களிப்பு நடைபெறும்போது கட்சியினர் அனைவரும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் வகையில் கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவால் மக்கள் செயல் கட்சியின் நிலைப்பாட்டையொட்டி மசெகவின் அனைத்து நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். கொறடா உத் தரவு கடந்த காலங்களில் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவு 377ஏ-ஐ சுட்டிக்காட்டி பேசிய திரு லாரன்ஸ் வோங், "இந்தச் சட்டம் அமலாக்கப்படாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இது பொதுக்கொள்கையாகும். இந்தச் சட்டத்தை நீக்கினாலும் சமூகத்தில் இதன் தொடர்பில் மாற்றம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார்.
"நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவு 377ஏ தொடர்பான விவாதத்தின்போது கொறடா உத்தரவை அகற்ற விரும்பவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய நாள் பேரணி உரையில் சட்டப் பிரிவு 377ஏ நீக்கப்படும் என்றும் அதே சமயத்தில் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமண வரை முறையை பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
உள்ளூர் ஊடகமான சிஎன்ஏவுக்கு அளித்த பேட்டியில் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தமது கருத்தை தெரிவித்திருந் தார்.
இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள 'பென்டகோஸ்டல் அலை யன்ஸ்' என்ற அமைப்பு, 'கரிஸ்மேட்டிக்' தேவாலயங்கள் போன்ற சில அமைப்புகள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க கட்சிக் கொறடாவைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளன. ஆனால் கட்சியில் பொதுவான எண்ணத்தை உறுதிப்படுத்துவதே கொறடாவின் முக்கிய நோக்கமாகும். ஒழுங்குமுறையுடன் சுமூகமான நாடாளுமன்ற நடவடிக்கை களுக்கும் அது வழி வகுக்கிறது என்று சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார். இவர்தான், அரசாங்கக் கொறடவாக செயல்படுகிறார்.
இதற்கிடையே எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, மக்கள் செயல் கட்சி தனது கொறடா உத்தரவு பயன்படுத்துவது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டது.

