அரசாங்கம், தற்போதுள்ள திருமண வரையறையைக் கட்டிக்காக்க உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், உள்ளூர் ஊடகமான சிஎன்ஏவுக்கு அளித்த நேர்காணலில் திரு எட்வின் டோங்கும் பங்கேற்று தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த உத்தேச பாதுகாப்பு சட்டத் திருத்தம், தற்போதைய திருமண வரையறையை பொது வீடமைப்பு, பள்ளி பாடத்திட்டங்கள் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
சில தேவாலயங்கள் கேள்வியெழுப்பியபடி, அரசியலமைப்புச் சட்டத்தில் ஏன் திருமண வரையறை உறுதிப்படுத்தப்படவில்லை என கேட்கப்பட்டதற்கு "பொருத்தமாக இருக்காது" என்பதே முக்கிய காரணம் என்றார் திரு டோங்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள், வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமைகள் ஆகியவற்றுக்கான உரிமைகளைப் போலவே திருமணபந்தம் என்ற நிலையையும் உயர்த்தும் என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கை சிலரை திருப்திப்படுத்தி னாலும் மற்ற பிரிவினர் கலக்க மடையலாம் என்று அமைச்சர் எச்சரித்தார்.
இது சமூகத்திற்கு நல்லதல்ல என்றும் சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங் மேலும் தெரிவித்தார்.

