பொதுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்போது ஒரு மாது இந்தியப் பெண் ஒருவரைத் தனது முழங்கையால் இடித்து பேருந்திலிருந்து இறங்கிய பிறகு அவரை இன ரீதியாக அவதூறு செய்ததாகக் கூறப்படுகிறது.
கோனி சோ என்ற அந்த மாதின் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தியப் பெண்ணிடம் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக நடந்துகொண்டது, இன ரீதியாக அவரை மனதளவில் காயப்படுத்தியது ஆகியவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் 47 வயது சோ நேற்று குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

