தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரந்தூக்கி கவிழ்ந்தது, ஊழியரைக் காணவில்லை

2 mins read
ff414c84-d1cb-47c2-b0d2-5e1e3d4aad27
கெப்பல் பட்டறையில் கவிழ்ந்த பாரந்தூக்கி. சம்பவத்தைத் தொடர்ந்து கடலுக்குள் விழுந்த வெளிநாட்டு ஊழியரைக் காணவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

துவா­சில் உள்ள கெப்­பல் பட்­ட­றை­யில் பாரந்­தூக்கி கவிழ்ந்­த­தில் காணாமற்போன ஊழி­யர் ஒரு­வரைத் தேடும் பணி மேற்­கொள்ளப்­பட்­டு­ வ­ரு­கிறது.

பட்­ட­றை­யில் வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த பங்­க­ளா­தே­‌ஷைச் சேர்ந்த 38 வயது ஊழி­யரை மீட்­புப் பணி­யா­ளர்­கள் தேடி வரு­கின்­ற­னர். கெப்­பல் பட்­டறை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, கட­லோரக் காவற்படை ஆகி­யவை மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தி­னம் காலை 10.40 மணி­ய­ள­வில் 51 பயனியர் செக்டர் ஒன்றில் விபத்து நேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஊழியர் கடலுக்குள் விழுந்தார்.

நேற்று பிற்பகல் 3.15 மணி நில­வரப்­படி அவரைக் காண­வில்லை.

இந்த விபத்­தில் நால்­வ­ருக்கு லேசான காயங்­கள் ஏற்­பட்­டன. பங்­க­ளா­தே‌ஷைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த ஒரு­வர், சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் ஆகி­யோர் காய­மடைந்­த­னர். அவர்­க­ளின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

பாரந்­தூக்கி நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த பகுதி இடி விழுந்­த­தால் கட­லுக்­குள் கவிழ்ந்­த­தா­க கெப்­பல் பட்­டறை வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்பவம் நிகழ்ந்தபோது, இரண்டு ஊழி­யர்­கள் கட­லுக்­குள் விழுந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஒரு­வர் மீட்­கப்­பட்­டார். மற்­றொரு­வரைக் காண­வில்லை.

பட்­ட­றை­யில் பணி­கள் தற்­காலி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்டுள்­ளன. விபத்து குறித்து மனி­த­வள அமைச்சு விசா­ரித்து வரு­கிறது.

இச்சம்பவம், கெப்­பல் பட்­ட­றை­யில் இவ்வாண்டு நிகழ்ந்த இரண்­டா­வது வேலை­யிட விபத்து. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று சாரக்­கட்டு சரிந்து விழுந்­த­தில் கப்­ப­லில் பழு­து­பார்ப்பு பணி­யில் ஈடுப்­பட்­டி­ருந்த இரண்டு பங்­க­ளா­தே‌‌ஷ் ஊழி­யர்­கள் மாண்­ட­னர்.

இம்மாதம் மூன்றாம் தேதி நிலவரப்படி வேலை­யிட விபத்­து­களில் இவ்வாண்டு 32 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.