தங்ளின் நிலையத்திற்குப் புதிய தலைவர்

தங்ளின் நிலையத்திற்குப் புதிய தலைவர்

1 mins read
44a999d6-52a4-40fb-a503-ab29cf33cf31
-

தங்­ளின் நிலை­யத்­தின் புதிய தலை­வ­ரா­கத் திரு சொங் ஸீ செங் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்­குப் போட்­டி­யாக இருந்த திரு ஹென்ரி லிங் தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வில்லை.

நேற்று முன்­தி­னம் நடந்த அந்­தத் தேர்­தலை நடத்­தி­யது சரி­யல்ல என தான் எண்­ணி­ய­தால் திரு ஹென்ரி லிங் போட்­டி­யி­ட­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

இதற்கு முன்பு தலை­வர் பத­வியை வகித்­த­வர் திரு இயோ என் லாய். தான் மேற்கொண்ட பல்­கலைக் கழ­கப் பட்­டக் கல்­வி­யின் நம்பகத்தன்மை தொடர்­பில் சர்ச்சை எழுந்­த­தைத் தொடர்ந்து திரு இயோ சென்ற மாதம் பதவி வில­கி­னார்.

கடந்த மே மாதம் 30ஆம் தேதி­யன்று நடை­பெற்ற முந்­தைய தேர்­தலில் போட்­டி­யிட்டு திரு இயோ வெற்றி பெற்­றார். அந்­தத் தேர்­த­லில் அவ­ருக்கு எதி­ரா­கப் போட்டி­யிட்ட ஒரே நபர் திரு ஹென்ரி லிங்.

தற்போதைய தலைவரான திரு சொங், திரு இயோ அந்தப் பதவியை வகித்­த­போது நிர்­வா­கக் குழு உறுப்­பி­ன­ராக இருந்தார்.