கெப்பல் பட்டறையில் பாரந்தூக்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்த பகுதி இடி விழுந்ததை தொடர்ந்து பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் கடலுக்குள் விழுந்தார். அவருடைய சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
மாண்டவரின் குடும்பத்துக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், விசாரணை தொடர்பில் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் கெப்பல் பட்டறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு அருகே கடலில் மிதந்துகொண்டிருக்கும் சடலத்தை மீட்க குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) காலை பாரந்தூக்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பங்களாதேஷைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூரர் ஒருவர் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.
பட்டறையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது.