ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரில் அடுத்து என்ன என்று விவரிக்கப்பட்டது. இதில் மூன்று முக்கிய சூழ்நிலைகள் முன்வைக்கப்பட்டன.
- புதிய கொவிட்-19 அலை தவிர்க்கப்படுகிறது
இதுவே சிங்கப்பூருக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நிலைமை ஏற்பட்டால், கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த தேவையில்லை.
- அடுத்து வருவது ஓமிக்ரான் அலை
ஓமிக்ரான் அலையிலிருந்து நாடு அண்மையில் மீண்டுவந்ததால், இந்த நிலைமை நமக்கு சாதகமாக இருக்கும். ஓமிக்ரான் கிருமியிலிருந்து நமக்கு நல்ல பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளது இதற்கு காரணம்.
- புதிய கிருமி; புதிய அலை
இந்த சூழ்நிலை சிங்கப்பூருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த காரணத்தினால் தகுதிபெறும் அனைவரும் தடுப்பூசியும், கூடுதல் தடுப்பூசியும் போட்டுக்கொள்வது அவசியம். இதோடு தேவை ஏற்பட்டால், பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்.