முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு தனிமை உத்தரவு இராது

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு தனிமை உத்தரவு இராது

1 mins read
d3996def-09f4-4619-8fd1-eb6e927f8003
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு ஆகஸ்ட் 29 முதல் சிங்கப்பூரில் ஏழு நாள் இல்லத் தனிமை இருக்காது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19க்கு எதிராக முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பய­ணி­கள், அடுத்த திங்­கட்­கி­ழமை முதல் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றத் தேவை இருக்­காது. இதன்­படி சிங்­கப்­பூரை வந்­த­டைந்­த­தும் முன்­னர் நடை­மு­றை­யில் இருந்த ஏழு நாள் இல்­லத் தனிமை உத்­த­ரவை வெளி­நாட்­டுப் பய­ணி­கள் நிறை­வேற்­றத் தேவை­யில்லை.

அதே­வேளை, நீண்­ட­கால அட்டை­தா­ரர்­களும் 13 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தி­லான குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­களும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­ நிலையில் அனு­மதி ஒப்­பு­தல் விண்­ணப்ப நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டார்­கள்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கையாள்­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு, நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இவ்­வாறு தெரி­வித்­தது. சமூக அள­வி­லும் அனைத்­து­லக அள­வி­லும் நிலை­மையை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக பய­ணம் தொடர்­பான நடை­மு­றை­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இவ்­வாறு இல்­லத் தனிமை உத்­த­ரவு அகற்­றப்­ப­டு­வ­தால் 'பிசிஆர்' பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் நடை­மு­றை­யும் நீக்­கப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர், சிங்­கப்­பூ­ருக்கு வரும் முன் இரண்டு நாள்­க­ளுக்­குள், தங்­களுக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­திப்­ப­டுத்­தும் 'பிசி­ஆர்' அல்­லது 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­யைத் தொடர்ந்து செய்­து­கொள்ள வேண்­டும்.

சில எஸ்­ஐஏ பய­ணங்­களில் முகக்­க­வ­சம் தேவை இல்லை

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் விமா­னங்­களில் பய­ணம் செய்­வோர், அடுத்த திங்­கட்­கிழமை முதல் குறிப்­பிட்ட சில பய­ணங்­க­ளின்­போது முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்று நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. சாங்கி விமான நிலை­யத்­தி­லும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.