தஞ்சோங் பகார் விபத்தில் ஐவர் பலி; துரதிர்ஷ்ட சம்பவம் என தீர்ப்பு

தஞ்சோங் பகார் விபத்தில் ஐவர் பலி; துரதிர்ஷ்ட சம்பவம் என தீர்ப்பு

2 mins read
9f8f2193-a73d-475a-b0eb-e7e90ed7b2e3
-

சிங்­கப்­பூ­ரில் தஞ்­சோங் பகா­ரில் சென்ற ஆண்டு பிப்­ர­வரி 13ஆம் தேதி, பிஎம்­ட­பிள்யூ கார் ஒரு கட்­ட­டத்­தில் மோதி தீப்­பி­டித்­ததில் ஐந்து பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

அவர்­க­ளின் மர­ணம் போக்­கு­வரத்து தொடர்­பான ஒரு துர­திர்ஷ்ட சம்­ப­வம் என்று இந்த வழக்கை விசா­ரித்த அர­சாங்க மரண விசா­ரணை அதி­காரி தீர்ப்­ப­ளித்­தார்.

யாருமே மது­பா­னப் போதை­யில் வாக­னம் ஓட்­டக்கூடாது என்­பதை வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு நினைவு­படுத்­தும் ஒரு சம்­ப­வ­மாக இந்த வழக்கு இருக்­கிறது என்றாரவர்.

அந்த ஐவ­ரில் ஒரு­வ­ரான ஜோனாத்­தன் லாங் ஜுன்­வெய், 29, என்­ப­வர் அந்­தப் பகு­தி­யில் அந்த காரை 182 கி.மீ. வேகம் வரை ஓட்­டி­னார். அதி­காலை சுமார் 5.40 மணிக்கு அந்த கார் அந்­தப் பகுதி­யில் உள்ள கடை வீடு ஒன்­றின் தூணில் மோதி தீப்­பி­டித்தது.

அப்­போது அந்த வாக­னம் 87 கி.மீ.-99 கி.மீ. வரை வேகத்­தில் போய் கொண்டு இருந்­தது.

ஆனால் அப்பகு­தி­யில் 50 கி.மீ. வேகத்­தில்­தான் காரை ஓட்­டிச் செல்ல முடி­யும். திரு லாங், மது­போ­தை­யில் காரை ஓட்­டி­யது பின்­னர் தெரி­ய­வந்­தது. இந்­தச் சம்­ப­வம் சென்ற ஆண்­டின் சீனப் புத்­தாண்­டின் 2வது நாளன்று நிகழ்ந்­தது.

அந்த காரில் இருந்த நான்கு பய­ணி­களும் கொல்­லப்­பட்­ட­னர். அந்த நால்­வ­ரும் 26 வயது முதல் 29 வரை வய­துள்ள இளை­யர்­கள்.

கடந்த 10 ஆண்­டு­களில் ஒரு சாலை விபத்­தில் இந்த அள­வுக்கு அதிக எண்­ணிக்­கை­யில் ஐவர் மாண்ட சம்­ப­வம் எது­வும் நிக­ழ­வில்லை என்று சென்ற ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் காவல்­துறை கூறியது.

விபத்து நிகழ்ந்­த­தற்கு கொஞ்ச நேரம் முன்­ன­தாக திரு லாங்­கும் அவ­ரு­டைய நண்­பர்­களும் அங் மோ கியோ­வில் சீனப் புத்­தாண்டு விருந்­தில் கலந்­து­கொண்டு மது­பா­னம் அருந்­தி­ய­தாக இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யம் அளித்த போக்­கு­வ­ரத்து காவல்­துறை புலன்­வி­சா­ரணை அதி­காரி தெரி­வித்து இருந்­தார்.