தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-புருணை ஒத்துழைப்பு பல துறைகளில் வலுவடைகிறது

2 mins read
ecfeef43-207f-4683-985b-b7b1a658395a
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள புருணை சுல்தான் ஹசனல் போல்கியா நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப்பை சந்தித்தார்.இந்த நிலையில் இரண்டு நாடு களுக்கு இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் எரி­பொ­ருள், பசு­மைப் பொரு­ளி­யல், உணவு, மருத்­துவ பொருள் விநி­யோ­கம் உள்­ளிட்ட துறை­களில் ஒத்­து­ழைப்பை மேலும் வலுப்­ப­டுத்து கின்­றன.

இதை­யொட்டி நேற்று இரண்டு பரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களில் இரு நாடு­களும் கையெ­ழுத்­திட்­டன. செயின்ட் ரெகிஸ் சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் நடை­பெற்ற இதற்­கான நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூ­ருக்கு இரண்டு நாள் வரு­கை­ய­ளித்திருக்­கும் புருணை சுல்­தான் ஹச­னல் போல்­கி­யா­வும் கலந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரின் சார்­பில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங்­கும் புருணை சார்­பில் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் டத்தோ ஸ்ரீ செட்­டியா டாக்­டர் அவாங் ஹாஜி முஹ­மட் அமின் லியுவ் அப்­துல்­லா­வும் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

வர்த்­தக, தொழில் அமைச்சு மற்­றும் புருணை நிதி அமைச்சு தலை­மை­யில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தின் முன்­னேற்­றங்­களை கவனிப் பதற்காக கூட்டுக் குழு ஒன்றை அமைக்­க­வும் இரு அமைச்­சர்­களும் இணங்கினர்.

நீடித்த, நிலை­யான எதிர் காலத்தை நோக்கி நடை­போ­டும் இரு நாடு­க­ளின் பரஸ்­பர நலன்­களை புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் பிரதி பலிப்­ப­தாக அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார்.

"சிறந்த நட்­பை­யும் ஒத்­து­ழைப்­பான துறை­களை அடை­யா­ளம் காண­வும் புரு­ணை­யு­டனான பங்­கா­ளித்­து­வம் தொட­ரும்," என்­றார் அவர்.

கரி­மம் குறை­வான தொழில் நுட்­பம், கரிம சேக­ரிப்பு போன்ற வளர்ந்­து­வ­ரும் துறை­களில் இரு நாடு­க­ளின் பரு­வ­நிலை இலக்கை அடைய இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு மேலும் வலுப்­படும்.

உணவு, தடை­யில்லா மருத்­துவ பொருள் விநி­யோ­கம் போன்­ற­வற்­றில் இரு நாடு­க­ளுக்கு இடையே ஒத்­து­ழைப்பு மேம்­படும். நெருக்­கடி காலத்­தில் பரஸ்­பர ஆத­ர­வுக்­கான ஆற்­றலை அதி­க­ரிக்க இது உத­வும். இத­னால் இரு நாடு­க­ளுக்கு இடையே உணவு, மருத்­து­வப் பொருள்­க­ளின் விநி­யோ­கம் தடை­யில்­லா­மல் இருக்­கும்.

இரு நாடு­க­ளுக்­கும் இடையே பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு நீண்­ட­கா­ல­மாக தொடர்­கிறது. புருணை உட­னான சிங்­கப்­பூ­ரின் வர்த்­த­கம் 2020லிருந்து 24 விழுக்­காடு அதி­க­ரித்து 2021ல் 2.7 பில்­லி­யன் வெள்­ளியை எட்­டி­யுள்­ளது.

புருணை சுல்­தா­னின் சிங்­கப்­பூர் பய­ணம் இன்று நிறை­வ­டை­கிறது.