சட்டப்பிரிவு 377ஏ மாற்றம்: ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த சமயக் குழுக்கள்

சட்டப்பிரிவு 377ஏ மாற்றம்: ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த சமயக் குழுக்கள்

2 mins read
dcb019d0-a1da-49b8-966a-3d930090add3
-

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உறவு குற்­றம் என்று வகைப் ­ப­டுத்­தும் சட்­டப்­பி­ரிவு ரத்து செய்­யப்­படும் எனும் அறிவிப்­பைத் தொடர்ந்து, ஒற்­று­மைக்­கும் ஆக்­க­பூர்­வமான உரை­யா­ட­லுக்­கும் இங்­குள்ள சமய அமைப்­பு­கள் அழைப்பு விடுத்­துள்­ளன.

குற்­ற­வி­யல் சட்­டத்­தின் சட்­டப்­பி­ரிவு 377ஏ மீட்­டுக் கொள்­ளப்­ப­டு­வது பற்றி நேற்று கருத்­து­ரைத்த சிங்­கப்­பூர் பௌத்­த சம்­மே­ள­னம், பிரிவை உண்­டாக்­கும் இந்த விவ­கா­ரத்­தால் மேலும் பிள­வு­கள் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க, நாடு ஒன்­றாக முன்­னோக்­கிச் செல்ல வேண்டும் என்­றது.

சட்­டப்­பி­ரிவு 377ஏ ரத்து செய்­யப்­படும் என்­றும் திரு­ம­ணத்­தின் வரை­ய­றையை மாற்­றக் கோரும் சட்­ட­வ­ழக்­கு­கள் தொடுக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்க, அர­சாங்­கம் அர­சி­யல் சாச­ன­த்தை மாற்­றும் என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த தேசிய தினப் பேரணி உரை­யில் கூறி­ யி­ருந்­தார்.

ஆணும் பெண்­ணும் செய்­து­கொள்­வதே திரு­ம­ணம் என்று வரை­ய­றுப்­ப­தும் அதன் அடிப்­ப­டை யில் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வான கொள்­கை­களை வகுப்­ப­தும் நாடாளு­மன்­றத்­தின் உரிமை என்­பதை அர­சி­யல் சாச­னத்­தின் மாற்­றம் தெளி­வு­ப­டுத்­தும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் க. சண்­ மு­கம் தெரிவித்தார்.

இவை குறித்து ஏற்­கெ­னவே சிங்­கப்­பூர் மெத்­த­டிஸ்ட் தேவா­ல­யம், இந்து ஆலோ­சனை மன்­றம், சீக்­கி­யர் ஆலோ­சனை மன்­றம், முஸ்­லிம் நிபு­ணர்­க­ளின் சங்­கம் உள்­ளிட்ட அமைப்­பு­கள் கருத்­து­உரைத்­துள்­ளன.

சட்­டப் பிரிவு 377ஏ பற்­றிய பேச்சு 2007 முதல் தொடங்­கி­ய­தா­க­வும் குடிமை, சமய அமைப்­பு ­க­ளு­டன் அர­சாங்­கம் இது­பற்றி ஆழ­மான கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யுள்­ள­தா­க­வும் சிங்­கப்­பூர் பௌத்­த சம்­மே­ள­னம் குறிப்­பிட்­டது. இந்த விவகாரத்தால் காலப்­போக்­கில் ஏற்­பட்­டி­ருக்கக்­கூ­டிய கருத்­து­வே­று­பா­டு­களைத் தணிக் கும் பொருட்டு நடு­நி­லை­யான கலந்­து­ரை­யா­ட­லுக்கு சம்மேளனம் அழைப்பு விடுத்­தது.

இத­னி­டையே, குற்­ற­வி­யல் சட்­டத்­தின் சட்­டப்­பி­ரிவு 377ஏ மீட்­டுக் கொள்­வ­தற்கு பத்து பேரில் நான்கு பேருக்கு மேல் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தாக இந்த வாரம் கருத்­தாய்வு ஒன்று கண்­ட­றிந்­தது.

தேசிய தினப் பேரணி உரைக்­குப் பிறகு பிளேக்­பாக்ஸ் ஆய்வு நிறு­வ­னம் கருத்­தாய்வை நடத்­தி­யது. அதில் 18 வய­துக்­கும் மேற்­பட்ட 650 சிங்­கப்­பூர் பெரி­ய­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர். அவர்­களில் 43 விழுக்­காட்­டி­னர், சட்­டப்­பி­ரிவு 377ஏயை ரத்து செய்­யும் நட­வ­டிக்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

சட்­டப்­பி­ரி­வின் ரத்தை எதிர்த்த 21 விழுக்­காட்­டி­ன­ரை­விட இது இரட்­டிப்பு அதி­கம். 34 விழுக்­காட்­டி­னர் சட்­டப் பிரி­வின் ரத்தை எதிர்க்­கவோ ஆத­ரிக்­கவோ இல்லை. 35 வய­துக்­கும் கீழ் உள்­ள­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் சட்­டப் பிரிவை ரத்து செய்­வதை ஆத­ரித்­த­னர்.

அதே நேரம், திரு­மண உற­வின் வரை­ய­றை­யைப் பாதுக்­காக்க அர­சாங்­கம் அர­சி­யல் சாச­னத்­தைத் திருத்­து­வ­தற்கு மூன்­றில் இரண்டு பங்­கி­னர் ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

கருத்­தாய்வு செய்­யப்­பட்­ட­வர்­களில் 55 விழுக்­காட்­டி­னர், ஒத்த பாலீர்ப்­பு­டை­ய­வர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொள்­வதை எதிர்த்­த­னர்.