யுகேஷ் கண்ணன்: 'கற்க கற்க தமிழ்மொழி மென்மேலும் அழகாகத் தெரிந்தது'

யுகேஷ் கண்ணன்: 'கற்க கற்க தமிழ்மொழி மென்மேலும் அழகாகத் தெரிந்தது'

1 mins read
f706ef45-63fe-4793-8a4a-a6086f847e3e
-

தமிழ் முர­சில் பணி­யாற்ற விரும்­பும் யுகே‌ஷ் கண்­ணன், 21, தமிழ் மொழி, கலா­சா­ரம், விளை­யாட்டு போன்ற துறை­களில் மிகுந்த ஆர்­வம் கொண்­ட­வர்.

தெலுங்கு தாய்­மொ­ழி­யாக இருந்­தா­லும் தமிழ்­மொழி, பண்­பாட்­டில் அவ­ருக்கு அதிக நாட்­ட­முண்டு. பள்­ளிப் பரு­வத்­தின் ஒவ்­வொரு நிலை­யி­லும் தமி­ழைக் கற்­ற­போது அது மென்­மே­லும் அழ­கா­கத் தெரிந்­தது என்று அவர் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

தமிழ்­மொ­ழி­யி­லும் மற்ற சமூக நடப்­பு­க­ளி­லும் அக்­கறை உள்ள யுகேஷ், தன் திற­மை­களை மேம் படுத்­திக்­கொள்ள தமிழ் முரசு நல்ல தள­மாக அமைந்­தது என்று தெரிவித்தார். .

தொண்டு செய்­வ­தி­லும் யுகே­ஷிற்கு விருப்­பம் அதி­கம். ஒவ்­வொரு வார­மும் 'ஸ்போர்ட்ஸ்­கேர்' எனும் தொண்­டூ­ழிய அமைப்­பின்­வழி வச­திக்­கு­றைந்­தப் பிள்­ளை­க­ளுக்கு இவர் காற்­பந்து சொல்­லிக் கொடுத்து வரு­கி­றார்.

யுகேஷ் தற்­போது சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அர­சி­யல் துறை­யில் பயின்று வரு­கி­றார். நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தமிழ் முர­சில் இவர் தன் பணி­யைத் தொடங்­கு­வார்.

தமிழ் முர­சில் தன்­னு­டைய வேலைப்­ப­யற்­சி­யைக் கடந்த சில மாதங்­க­ளா­க செய்­து­வந்­தா­ர் யுகே‌ஷ் கண்ணன்.