'சிறப்புத் தேவையுடையோருக்கு நிறுவனங்கள் வேலை தரவேண்டும்'

'சிறப்புத் தேவையுடையோருக்கு நிறுவனங்கள் வேலை தரவேண்டும்'

1 mins read
17545288-67f5-4197-a0b0-6645362eb353
சிறப்புத் தேவையுடையோருக்கு வேலை வழங்குவதில் நிறுவனங்கள் ஆக முக்கியப் பங்கு வகிப்பதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்கு வேலை கிடைப்­ப­தில் நிறு­வ­னங்­களுக்­கு ஆக முக்­கி­யப் பங்கு இருப்­ப­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார்.

கூடு­த­லான சிறப்­புத் தேவை­உடை­யோ­ருக்­குத் தொடர்ந்து வேலை கிடைப்­பதை உறு­தி­செய்ய நிறு­வ­னங்­கள் அவர்­களை வேலைக்கு எடுக்­க­வேண்­டும். சமூகத்­திற்கு நன்மை செய்­வ­தற்கோ தேவைப்­ப­டு­வோ­ருக்கு உதவிக்­க­ரம் நீட்­டு­வ­தற்கோ மட்டு­மின்றி சிறப்­புத் தேவை­யு­டை­யோரை வேலைக்கு எடுப்­ப­தில் உள்ள நற்­பலன்­களை நிறு­வ­னங்­கள் உண­ர­வேண்­டும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் ஆக அதி­க­மா­னோ­ருக்கு வேலை தரும் துறை­களில் ஒன்­றான அர­சாங்­கத் துறை அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வேலை நிய­மன அணு­கு­மு­றையைப் பின்­பற்­று­வ­தைத் திரு வோங் சுட்டி­னார். கூடு­தல் நிறு­வ­னங்­களை அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் வேலை நிய­மன அணு­கு­முறை­யைப் பின்­பற்­று­மா­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார். ஆத­ரவு வழங்­கு­வ­தில் அர­சாங்­கம் தொடர்ந்து முக்­கி­யப் பங்கு வகிக்­கும் என்­றும் திரு வோங் சொன்­னார்.

"அர­சாங்­கம் அதனால் முடிந்த எல்லா உத­வி­யை­யும் செய்­யும்," என்­றார் அவர்.

"நமது சட்­டங்­கள், திட்­டங்­கள், நிறு­வ­னங்­க­ளுக்கு எங்­க­ளால் வழங்கக்­கூ­டிய உதவி ஆகி­ய­வற்றை தொடர்ந்து ம­று­ப­ரி­சீ­லனை செய்­வோம்," என்று திரு வோங் கூறினார். மீடி­யா­கார்ப்­பின் அரங்­கில் நடை­பெற்ற 'இன்­கு­ளு­சிஃப் பிஸ்­னஸ் ஃபாரம்' எனும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­வது தொடர்­பி­லான வர்த்­தக மாநாட்­டில் திரு வோங் பேசி­னார்.