பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இரு நண்பர்கள் ஓர் ஆடவரைக் கத்தி, கம்பு, 'நக்கல்டஸ்டர்' எனும் ஆயுதம் ஆகியவற்றால் தாக்கியிருக்கின்றனர். அந்த ஆடவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நண்பர்களில் ஒருவரின் மனைவி கூறியதைத் தொடர்ந்து அவர்கள் இச்செயலை மேற்கொண்டனர்.
தாக்கப்பட்ட 29 வயது ஆடவரின் தலையில் பெரிய அளவில் தோல் கிழிந்தது. 'நக்கல்டஸ்டர்' ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நிலை உருவானது. கத்திக் குத்துக் காயங்கள், எலும்பு முறிவு ஆகியவற்றாலும் அவர் பாதிக்கப்பட்டார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்படவில்லை.
குற்றவாளிகளில் ஒருவரான பெண்ணின் கணவர் 32 வயது ஆண்ட்ரே சென் சி'என்னுக்கு எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. மற்றொரு குற்றவாளியான 27 வயது கெர்வன் வோங் ஹெங்கிற்கு ஏழாண்டுச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.