$32 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொகுசுப் பொருள்களை விற்பதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் அவற்றை ஒப்படைக்காமல் தலை மறைவாகி, பிறகு பிடிபட்ட தம்பதியின் வழக்கு விசாரணை தொடர்கிறது.
சிங்கப்பூரரான பி ஜியாபெங், தாய்லாந்து நாட்டவரான அவரது மனைவி பன்சூக் சிரிவிப்பா இருவர் மீதான மோசடி வழக்கு, வழக்குக்கு முந்திய விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 11ஆம் தேதி வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் நடைபெறும்.
வழக்குக்கு முந்திய கலந்துரையாடலில் இருதரப்பு வழக்கறிஞர்களும் கூடி, வழக்கை கையாளும் வழிகள் பற்றி ஆலோசிப்பார்கள். இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
பி, பன்சூக் இருவருக்கும் நேற்று மீண்டும் பிணை வழங்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை இருவரும் டிரேட்நேஷன், டிரேட்லக்ஷரி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றினர் என்று கூறப்பட்டது.
வாடிக்கையார்களிடம் சொகுசு கைக்கடிகாரங்களையும் கைப்பை களையும் விற்பதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றினர். அவர்கள் மீது 180க்கும் மேற்பட்ட காவல்துறை புகார்கள் அளிக்கப்பட்டன. நாட்டைவிட்டு தப்பித்த அவர்கள் ஜோகூரில் பிடிபட்டனர்.

