தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, பள்ளி உள்ளிட்ட இடங்களில் மூன்று முறை ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
தற்போது 36 வயதாகும் அந்த ஆடவர், சிறுமிக்கு 10 முதல் 13 வயதிருக்கும் வரை குற்றங் களைப் புரிந்தார் என்று கூறப்பட்டது. சிறுமி அவரது மாணவியாக இருந்தாரா என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறவில்லை.
பாலியல் தொந்தரவு அளித்ததன் தொடர்பில் ஆடவர்மீது கடந்த புதன்கிழமை மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு 10,000 வெள்ளி பிணை நிர்ணயிக்கப்பட்டது.
சிறுமியின் அடையாளத்தை மறைக்கும் பொருட்டு ஆடவரைப் பற்றியோ பள்ளியைப் பற்றியோ விவரங்களை வெளியிட முடியாது.
இச்சம்பவம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு நேற்று அனுப்பிய அறிக்கையில், அந்த நபர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் எந்தப் பள்ளி யிலும் தற்போது பணியாற்ற வில்லை என்றும் தெரிவித்தது.
14 வயதுக்கும் குறைந்தவர் களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுக் குற்றங்களைப் புரிந்தோருக்கு ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவை அனைத்தும் விதிக்கப்படலாம்.