தீவெங்கும் சோதனைகளில் 134 பேர் கைது: $555,000 மதிப்புள்ள போதை மருந்துகள், காற்றழுத்தத் துப்பாக்கி பிடிபட்டன

தீவெங்கும் சோதனைகளில் 134 பேர் கைது: $555,000 மதிப்புள்ள போதை மருந்துகள், காற்றழுத்தத் துப்பாக்கி பிடிபட்டன

2 mins read
dcefc1a7-f704-4ce7-b7d2-9aeb959aa456
போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சாய் சீயில் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் தூக்கி எறிந்ததாக நம்பப்படும் போதைப்பொருளைக் கைப்பற்றினர். படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 2

மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்­திய சோத­னை­களில், 134 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

$555,000 சந்தை மதிப்­புள்ள போதை மருந்­து­க­ளு­டன் காற்­ற­ழுத்­தத் துப்­பாக்­கி­யும் அதன் குண்­டு­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு இதை நேற்று தெரி­வித்­தது.

கைப்­பற்­றப்­பட்ட போதை மருந்­து­களில் 3,730 கிராம் போதை­மிகு அபின், 866 கிராம் 'ஐஸ்', 5,240 கிராம் கஞ்சா, இரண்டு கிராம் கெட்­ட­மின், 51 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள், 108 எரி­மின்-5 மாத்­தி­ரை­களும் அடங்­கும். புக்­கிட் பாத்­தோக், காலாங், செங்­காங் உள்­ளிட்ட இடங்­களில் சோத­னை­கள் நடத்­தப்­பட்­ட­தாக மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சிங்­கப்­பூர் அஞ்­சல் நிலை­யத்­திலுள்ள குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணைய அதி­கா­ரி­கள் ஓர் பொட்­ட­லத்தை ஊடு­க­ருவியைக் கொண்டு வருடி­ய­போது அது சரி­யாய் இல்லை என்­ப­தைக் கண்­ட­றிந்­த­னர்.

அதில் இருந்த இசை­வட்­டில் 26 கிராம் கஞ்சா கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரி­வி­டம் அது ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

கடந்த புதன்­கி­ழ­மை­யும் வெள்­ளிக்­கி­ழ­மை­யும் கிம் மோ ரோடு அருகே அதி­கா­ரி­கள் 21 வய­துள்ள இரண்டு சிங்­கப்­பூர் ஆட­வர்­க­ளைக் கைது செய்­த­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரி­ட­மும் அவ­ரது வீட்­டி­லும் சுமார் 191 கிராம் கஞ்­சா­வும் போதைப் பொருள் புழங்­கு­வ­தற்­கான சாத­னங்­களும் கைப்­பற்­றப்­பட்­டன. அவ­ரது காரில் காற்­ற­ழுத்­தத் துப்­பாக்­கி­யும் குண்டு களும் (கீழ்ப்­ப­டம்) கைப்­பற்­றப்­பட்டு காவல்­து­றை­யி­டம் தரப்­பட்­டன.

செவ்­வாய்க்­கி­ழமை காலை சாய் சீ அவென்யூ அருகே உள்ள வீட்­டில் நடந்த சோத­னை­யில், 58, 59 வய­துள்ள இரண்டு சிங்­கப்­பூர் ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அந்த வீட்­டில் போதை­மிகு அபி­னும் மெத்­த­டோ­னும் கைப்­பற்­றப்­பட்­டன. கைதா­கும் முன்­னர் இரு­வ­ரும் சன்­ன­லுக்கு வெளியே போதை மருந்­து­களை வீசி­னர் என்று நம்­பப்­ப­டு­கிறது. அதி­கா­ரி­கள் கைகளில் 13 கிராம் போதை­மிகு அபி­னும் உறிஞ்­சு­கு­ழாய்­களும் சிக்­கின.